பணம் தராததால் பெற்றோரை கட்டி வைத்து அடித்த மகன் !

குடிக்க பணம் தராததால் பெற்றோரை கயிற்றால் கட்டி வைத்து பெற்ற மகனே அடித்து, உதைத்துள்ள சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பணம் தராததால் பெற்றோரை கட்டி வைத்து அடித்த மகன் !
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர்கள் மணிக்கட்டி மற்றும் ஈஸ்வரி தம்பதி. இவர்கள் தினக்கூலி வேலை பார்த்து ஜீவனம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் நான்காவது மகனான கார்த்திக் ராஜா மது போதைக்கு அடிமை யானவர். 

எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்த இவர், அடிக்கடி மது அருந்த தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்றும் மது அருந்த பணம் கேட்டு தனது பெற்றோரிடம் கார்த்திக் ராஜா சண்டை போட்டுள்ளார். 
ஆனால், அவர்கள் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா தனது பெற்றோர்கள் இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டியுள்ளார்.

தொடர்ந்து, அவர்களை அடித்து, உதைத்து வீட்டிற்குள் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டார். 

அவர்களின், அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து இருவரையும் மீட்டுள்ளனர்.மேலும் கார்த்திக் ராஜாவை பிடித்து காவல் துறையினரிடமும் ஒப்படைத் துள்ளனர்.
பெற்ற மகனே குடிப்பதற்கு பணம் தராத பெற்றோரை அடித்து துன்புறுத்திய சம்பவம் இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings