மனைவி எப்போ கர்ப்பம் ஆவாங்கன்னு கேட்க வேண்டியது தானே? வித்யாபாலன் !

திருமணமான நடிகையை பார்த்தால் இன்னும் குழந்தை பெற வில்லையா என்று கேட்போர் உங்களின் மனைவியை 
மனைவி எப்போ கர்ப்பம் ஆவாங்கன்னு கேட்க வேண்டியது தானே? வித்யாபாலன் !
எப்பொழுது கர்ப்பமாக்குவீர்கள் என நடிகர்களை கேட்க வேண்டியது தானே என பாலிவுட் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார். 
பாலிவுட்டில் ஹீரோக் களுக்கு இணை யான கதா பாத்திரங் களில் நடித்து வருபவர் வித்யாபாலன். 

அவர் நடித்துள்ள கஹானி 2 படம் இன்று ரிலீஸாகி உள்ளது. இந்நிலை யில் வித்யா செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப் பதாவது,

நடிகைகள்

பேட்டிகளின் போது என் திருமண வாழ்க்கை மற்றும் நான் எப்பொழுது குழந்தை பெறப் போகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கி றார்கள். 

திருமணமான நடிகர்களும் உள்ளனர். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக் குகிறீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை.

நடிகை
நடிகர்க ளிடம் உங்களின் திருமண வாழ்வு எப்படி உள்ளது என்று கூட யாரும் கேட்பது இல்லை. திருமண மான பெண் என்பதை தாண்டி எனக்கென ஒரு அடை யாளம் உள்ளது.

சித்தார்த்

என் வாழ்வில் நான் தான் மிகவும் முக்கிய மான நபர் என்று கூறினால் மக்கள் ஒரு மாதிரி பார்க்கி றார்கள். திருமண மானதால் சித்தார்த் தான் முக்கியம் என்று நான் கூற வேண்டும் என எதிர் பார்க்கி றார்கள்.

டோன்ட் கேர்
சித்தார்த்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் என் வாழ்வில் நான் தான் முக்கிய நபர். இப்படி சொல்வ தால் நான் சுயநல வாதி என மக்கள் நினைத் தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
Tags: