வேலை செய்பவர்களுக்கு அஜீத் கட்டி கொடுத்த சொந்த வீடு !

நடிகர் அஜீத்குமார் தன்னிடம் வேலை செய்யும் 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். நடிகர் அஜீத் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
வேலை செய்பவர்களுக்கு அஜீத் கட்டி கொடுத்த சொந்த வீடு !
அவர் தன்னிடம் பணிபுரியும் வீட்டுக் காவலாளி, சமையல் காரர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கி அவரவர்களின் பெயரில் சொந்தமாக வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்.

கடந்த 8 மாதங்களாக நடந்து வந்த இந்த புதிய வீடுகள் கட்டுமானப்பணி தற்போது முழு வேலைகளும் முடிந்து கிரகப் பிரவேசத்திற்கு தயாராய் உள்ளது.

அஜீத் வீட்டில் பணிபுரியும் 12 பணியாளர்களும் அவரவர் களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் விரைவில் குடியேற வுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings