தாத்தாவிடம் இருந்து வரும் ஜீன் !

தாத்தா விடமிருந்து பேரப்பிள்ளை களுக்கு அப்படியே தங்களின் ஜீனை கடத்துவது உயிரியலில் அதிசய நிகழ்வுகளில் ஒன்று.
ஜீனை கடத்துவது உயிரியலில் அதிசய நிகழ்வு


உருவத்திலும் மட்டுமல்ல,  குணத்திலும் அவர்கள் அவர்களின் அப்பா, தாத்தாவைப் போலவே இருப்பார்கள்.

நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் மட்டும் அவர்களைப் போய் சேரவில்லை. உங்களின் மன நிலையும் தான். புரியவில்லையா?

நீங்கள் எப்போதும் மன அழுத்தத்துடனோ, அல்லது உங்கள் தந்தை மன அழுத்தத்துடன் இருந்தாலோ, 

அது உங்களின் அடுத்து வரும் சந்ததி யினருக்கும் இதே பிரச்சனைகள் நீடிக்கும் என்று கொலம்பியா பல்கலைக் கழகம் தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளது.

சுமார் 19 வயதுள்ள 251 பேர் அடங்கிய டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஆய்வை மேற்கொண்ட போது, அவர்களின் சென்ற இரு தலைமுறை களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். 
இதில் மன அழுத்தம், நம்பிக்கை யின்மை, எதிர்மறை எண்ணங்கள், தற்கொலை தூண்டப்படும் எண்ணம் ஆகியவை பெற்றுள்ள பிள்ளைகளை ஆராய்ந்த போது, அவர்களின் தாத்தாவிற்கோ,

அல்லது தந்தைக்கோ இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. 

மன அழுத்தம் தாத்தாவிற்கு இல்லாமல் அப்பாவிற்கு மட்டும் இருந்தால், அது குழந்தையின் மனோ நிலையும் பாதிக்கின்றது. 
தாத்தாவிடம் இருந்து வரும் ஜீன்


ஆனால் தாத்தா விற்கும் இருந்து, அப்பாவிற்கும் இருந்தால் மூன்று மடங்கு பேரனுக்கும் வர வாய்ப்புள்ளது என வெயிஸ்மான் என்ற கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர் கூறுகிறார்.

எனவே மன அழுத்தம் என்பது உங்களோடு முடிந்து விடுவதில்லை. உங்களையும் தாண்டி மூன்று தலைமுறை க்கு பாதிக்கிறது.

இது வெறும் சுற்று சூழ் நிலை மட்டும் சார்ந்தது அல்ல, உடலின் மரபணு சார்ந்த நிலை எனவும் கூறி யிருக்கிறார் வெயிஸ்மான்.

நாம் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும். நல்ல விஷயங்களை நீங்கள் குழந்தை களுக்கு சொல்லித் தர வேண்டிய தில்லை.

உங்களிடம் கற்றுக் கொள்ளும்படி நீங்கள் தான் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அவர்களுக்கு சொல்வதை விட நாம் செய்வதை தான் அவர்கள் செய்வார்கள்.
Tags:
Privacy and cookie settings