ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உறுதி.. சுப்ரமணிய சுவாமி !

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உறுதி.. சுப்ரமணிய சுவாமி !
இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று கூறிய அவர், 

அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற தவறுகளை விசாரித்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த மர்மம் நீடித்தால், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடருவேன் என கூறிய அவர், 

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் வாரிசாக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜக, அதிமுகவை உடைக்க சதி செய்வதாக கூறுவதில் உண்மை இல்லை என்று கூறிய சுப்ரமணிய சுவாமி, 

அந்த திறமை தன்னிடம் மட்டுமே உள்ளதாகவும், ஆனால், தான் அப்படி செய்ய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings