சந்தோசமாக இருக்க சிறையில் இருந்து தப்பிய திருடன் !

0
வாழ்க்கையில் நேர்மைக்கு உதாரணமாக எவ்வளவோ சம்பவங்கள் நடந்து உள்ளன. ஆனால் திருடன், ரவுடி, கொலைக் காரன் இவர்களிடம் நேர்மையை எதிர்ப் பார்க்க முடியுமா?
சந்தோசமாக இருக்க சிறையில் இருந்து தப்பிய திருடன் !
கெட்டவர்களிலும் நல்லவர்கள் உண்டு என்று நிரூபித் திருக்கிற ஒரு கொலைக் குற்றவாளியும், ரவுடியுமான ஒருவன். நம்ப முடிய வில்லையா..! தொடர்ந்து படியுங்கள்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி இவனுக்கு காதலி ஒருத்தியும் இருந்திருக்கிறாள். அவளுடன் ஊர் சுற்றுவதற்காக பல இடங்களில் திருட்டில் ஈடுபடுவது உண்டு.

அப்படி ஒருநாள் இவன் திருட போன இடத்தில் நடந்த சம்பவம் கொலையில் முடிந்து விட்டது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டான்.

இவனது காதலி அடிக்கடி சிறைக்கு வந்து பார்த்தி ருக்கிறாள். காதலி மோகத்தில் இருந்த வனுக்கு சிறைவாசம் விரக்தியை தந்தது. 
சிறையிலிருந்து தப்பிக்க திட்டமிட்டான். அதற்கான சரியான சந்தர்ப் பத்தையும் எதிர்நோக்கி காத்திருந்தான்.

அவனுக்கு அந்த சந்தர்ப்பமும் கிடைத்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கூட்டி கொண்டு போகும் போது அந்த ரவுடி போலீசாரிடம் இருந்து தப்பித்து விட்டான்.

போலீசாரிடம் தப்பிய ரவுடி தனது காதலிக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்திற்கு வரசொல்லி அவளை அழைத்து கொண்டு கோவாவிற்கு சென்று உல்லாசமாக ஊர் சுற்றி யிருக்கிறான்.

ஆனால் இங்கேயோ தப்பித்த ரவுடியை போலீசார் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. 

ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பிய அவன் காதலியை வீட்டில் விட்டு விட்டு நல்ல பிள்ளையாக போலீசில் மீண்டும் சரணடை ந்தான்.
ஒரு வாரமாக தேடிய போலீசார் அவன் திரும்பி வந்ததை கண்டு நிம்மதி யடைந்தனர். 

அவனது நேர்மையைக் கண்டு சிறைக் காவலர்கள் வியந்தாலும் ஒருவாரமாக அலைய விட்ட கடுப்பில் சரியான கவனிப்பு நடத்தியிருக் கிறார்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)