தாலி பறிபோன போது கூட நாகரீகமாக நடந்த நடிகை !

காவ்யா மாதவன் தனது வாழ்வில் புகுந்தாலும் விவாகரத்து குறித்து அறிக்கை வெளியிட்ட போது நடிகை மஞ்சு வாரியர் யார் மீதும் குறை கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தாலி பறிபோன போது கூட நாகரீகமாக நடந்த நடிகை !
நடிகர் திலீப்பு க்கும் கணவரை பிரிந்த நடிகை காவ்யா மாதவனு க்கும் இடையே தொடர்பு ஏற்பட்ட தால் அவர் தனது காதல் மனைவி யான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார் என்று கூறப் பட்டது.

தனது மணவாழ்வு முடிய வேறு ஒரு பெண் காரணம் என தெரிந்தும் மஞ்சு வாரியர் விவாகரத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில் யாரையும் குறை கூறவில்லை. 

அந்த அறிக்கை யின் சில பகுதிகள், விவாகரத்து செய்வது எனது தனிப்ப ட்ட விஷயம். நானும், அவரும் கூட்டாக சேர்ந்து தான் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்ற த்தை அணுகினோம். 

நானும் திலீப்பேட்டனும் (திலீப்) விவாகரத்து செய்வதற்கான காரணமும் தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் எங்களின் பிரைவசியை மதிக்குமாறு அனைவ ரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நான் என் கணவரை பிரிய என் தோழி களான கீத்து, சம்யுக்தா, பாவனா, பூர்ணிமா மற்றும் ஸ்வேதா மேனன் ஆகியோர் காரணம் என வதந்திகள் பரவுகின்றன. அவர்களு க்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் எல்லாம் நல்லதாகவே நடக்க திலீப் பேட்டனுக்கு வாழ்த்துக்கள். என் மகள் மீனாட்சிக்கு அவளின் தந்தையை எவ்வளவு பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். 

அவர் அவரிடம் பத்திரமாக இருப்பாள்.
Tags:
Privacy and cookie settings