நடிகை அதிதி மீது புகார் | complaint on the Actress Athithy !

நான், நெடுநல் வாடை என்ற படத்தை இயக்கி வருகிறேன். இதில், கதாநாயகி யாக அதிதியை அறிமுகப் படுத்தினேன். முதல்கட்ட படப் படிப்பு முடிந்ததும், பட்டதாரி என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.
என் படம் முடியாமல் இருந்தபோதும், அந்த படத்தில் நடிக்க அவரை அனுமதி த்தேன். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய போது உடல் ரீதியாக சோர்ந்து போய் பலவீன மாக இருந்தார். காட்சி களில் ஈடு பாடின்றி நடித்தார்.

இரவு நீண்ட நேரம் தூங்காமல் போனில் பேசிவிட்டு, காலை யில் படப் பிடிப்புக்கு கண் வீங்கி வந்தார். இதனால், அவருக்கும், எனக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. 

அப்போது பட்டதாரி படத்தில் தன்னுடன் கதாநாயக னாக நடிக்கும் அபிசரவண னுடன் தொடர்பு இருப்ப தாகவும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வ தாகவும், படப் பிடிப்புக்கு இடையூறு இல்லாமல் நடித்து முடிப்பேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர் சொன்னபடி நடக்க வில்லை. படப்பிடிப்பு க்கு வராமல் மாயமாகி விட்டார். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது. பேச்சு வார்த்தை யும் நடந்தது. எதற்கும் ஒத்து ழைக்க வில்லை.

அபிசரவணனு டனான மறைமுக காதல் வாழ்க்கை வெளிச் சத்திற்கு வந்து விடும் என்று பேச்சு வார்த்தை க்கு வராமல் தவிர்க் கிறார். இந்த பிரச்சினை யில் இருந்து தப்பிப்பதற்காக என் மீது நான் அவரை திருமணம் செய்ய வற்புறுத் தினேன் என்றும், 

தவறாக நடக்க முயன்றேன் என்றும் பொய்யான குற்றச் சாட்டுகளை கூறி தற்கொலை நாடகம் நடத்து கிறார். இந்த பிரச்சினை யை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:
Privacy and cookie settings