இஸ்லாமியப் புத்தாண்டு | Islamic New Year !

இப்படி முஸ்லிம்களுக்கு என்று தனியாக ஒரு புத்தாண்டு உண்டு என்ற செய்தி கூட நம்முடைய பல முஸ்லிம் (!) சகோதரர் களுக்கு தெரிவது இல்லை என்ற வேதனையான உண்மை ஒரு புறம் இருக்க,
மறு புறம் சில மெத்தப் படித்த மே(ல்) தாவிகளோ புத்தாண்டு கொண்டா டுவது நபிவழிக்கு மாற் றமானது, அது நவீனம், 

அனாச் சாரம் என்ற ஃபத்வா கொடுத்து இஸ்லா மியப் புத்தாண்டு என்ற மாபெரும் அடையா ளத்தை அழித்துக் கொண்டிரு க்கின்றனர்.

நாம் ஒன்றும் ஆங்கி லப் புத்தாண்டுக் கொண்டாட் டத்தைப் போன்ற குடி, கூத்து, ஆட்டம், பாட்டம் என்ற இழிவான செயல் களில் ஈடுபடச் சொல்ல வில்லை.

அல்லது மற்ற மதத்தவர்கள் தங்களது புத்தாண்டை மிகவும் கோலா கலமாகக் கொண்டாடி வருவது போன்று, நாமும் கொண்டாடு வதற்காக இந்த புத்தாண்டு வருவது மில்லை. 

மாறாக, நம்மீது மிகப் பெரி யதொரு சுமையைத் தாங்கி வருகின்றது என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வெறுமனே புத்தாண்டு வாழ் த்துகள், அல்லது அரபு நாடுகளிலே கூறுவது போல 'குல்ல ஆமின் வ அன்தும் பி கைர்' என்று சொல்வதின் மூலம் மட்டும் நம் புத்தாண்டுக் கடமை நிறை வேறி விட்டது என்று எண்ணி விடலாகாது.

மாறாக இஸ்லாமியப் புத்தாண்டின் தாத்பரியம், அதன் நோக்கம், அதன் வரலாறு மற்றும் அதன் பின்னணியில் 

உள்ள உயரிய தியாகம் போன்றவற்றை அறிவது நம் மீது கடமை என்பதை நாம் மனதால் உணர வேண்டும்.

இன்று இஸ்லாமிய சமுதாயம் பிளவுபட்டு, சிதறுண்டு, எதிரிகளால் தாக்க ப்பட்டு, வேதனைப்பட்டு, நொம்பல ப்பட்டு, 

யாராவது நமக்கு உதவ மாட்டா ர்களா என்று ஏங்கித் தவிக்கும் நாதியற்ற சூழ்நிலை யில் உள்ளது.
வேரை மறந்த மரங்கள் வாழ்வது கடினம். எந்த சமுதாயம் தன் னுடைய வேரைத் தொலை த்து விட் டதோ, அந்த சமுதாயம் விரைவில் தன்னையும் தொலை த்து விடும் என்பது மரபு.

தன் கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் எதிர்கால வரலா ற்றை படைக்க முடியாது எனும் கூற்றுக் கேற்ப இஸ்லாமியப் புத்தாண்டின் துவக் கத்தையும், அதன் அடிப்படையாக அமைந்த

ஹிஜ்ர த்தின் சுருக் கமான வரலா றையும், அதன் பின்ன ணியையும் ஆராய்ந்து அறிவது நம் ஒவ்வொ ருவரின் மீதும் தலையாய கடமை என்றால் அது மிகை யில்லை.

இஸ்லா மியப் புத்தாண்டு என்ற நினைவு வந்தாலே, உடனே 1437 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற உயிர் தியாகங்கள், சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கை க்காக பிறந்த பொன்னா ட்டை,

தம் சொத்துக் களை, சொந்தங் களை இழந்த நினைவுகள் நம் அனைவரின் மனக்கண் முன் பளிச்சிட வேண்டும். 

ஏனெனில் இப்படியொரு தியாக சரித்தி ரத்தை எந்த நாடும், எந்த ஏடும் பதிவு செய் ததில்லை. இனி பதிவு செய்யப் போவது மில்லை.

அந்த தியாக சரிதத்தை வாசிக்கும் யாரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க மாட்டார்கள். 

தியாகத்தின் சிகரமாக விளங்கும் அந்த பொன்னா ட்களை மனதிற் கொண்டு ஒவ் வொரு முஸ்லிமும் அல்லாஹ் விற் காகவும், அவன் தூதருக் காகவும்,
தூதர் காட்டிய மார்க்க நெறியைக் காப்பதற் காகவும், உறுதி கொண்டு, வீறு நடை போட வேண்டிய உத்வேக த்தையே அவை நினைவு படுத்துகின்றன. 
ஆனால் அந்த சரிதத்தை அறிந்தோர் நம்மில் எத்தனை பேர்? அதை அறிந் தாலும் நினைவு கூறுவோர் எத்தனை பேர்?

முதலில் இஸ்லா மிய ஆண்டு எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் அதைத் தெரிந்து கொண்டால் தான் அதன் முக்கியத்துவம் தெளிவாகும். 

பொதுவாக இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீ ஆண்டு என அடையாளப் படுத்தப் படுகிறது. ஹிஜ்ரீ காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாக கொண்டது. 

சந்திரக் காலண்டரே எல்லா இடத்திற்கும், நாட்டிற்கும் அனைத்து வகைப் பட்ட மனி தருக்கும் எளிமையானது.

எந்த ஒரு ஆய்வுக் கருவியின் துணை இல்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக் கூடியது. அதன் காரண மாகவே சீனர்கள், இந்தி யர்கள், அரேபி யர்கள் என 

பெரும்பாலான பழங் காலத்தைச் சேர்ந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படை யாக கொண்டே தங்களது நாட் களை கணக்கி ட்டு வந்துள்ளனர்.

நாம் இன்று உலக வழக்கில் பயன் படுத்தும் காலண் டருக்கு கிரிகோ ரியன் காலண்டர் என்று பெயர். அது சூரிய ஓட்டத்தை அடிப்படை யாகக் கொண்டு கணக்கிட ப்படுகிறது.

இன்று நாம் அச்சிடப் பட்ட காலண்ட  ர்களின் புண் ணியத்தில் சூரிய நாட்க ளை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள் கிறோம். 

இல்லை யெனில் சூரியன் நிற்கும் திசையை வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது.
இஸ்லாமியப் புத்தாண்டு | Islamic New Year !
இன்றைய நவீன யுகத்திலும், வயதான பெரியவர்கள் சிலர் வானத்தில் உலாவும் வட்ட நிலாவை ஒரே ஒரு முறை அண்ணாந்து பார்த்து விட்டு இன்றைக்கு வளர் பிறை பத்து என்று நொடியில் சொல்லி விட முடியும்.

ஆனால் சுட்டெ ரிக்கும் சூரியனை டெலஸ்கோப் வைத்து பலமுறைப் பார்த் தாலும் ஒரு தேர்ந்த விஞ்ஞா னியால் கூட சரியான தேதியை சொல்;ல முடியாது. 

எனவே எளிமை யான நாட்காட்டி நடை முறையான சந்திர மாதக் கணக்கே இஸ்லாமிய மாதக் கணக் காகவும் அறிஞர்களால் அங்கீகரிக் கப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டுக்கணக்கு ஆரம்பம்:

ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் உருவா னது அல்ல. இன்னும் சொல்ல ப்போனால், இஸ்லாமி யர்களுக்கு என்று தனியாக நாட் காட்டி அப்போது பின் பற்றப்பட வில்லை. 

அவர்களு க்குப் பின் வந்த அபுபக்கர் (ரளி) அவர்கள் காலத் திலும் இது உருவா க்கப்பட வில்லை.

ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மறைந்து ஏறத் தாழ ஏழு வருடங்கள் கழித்து உமர் (ரளி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639ம் ஆண்டு) 

வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம ஆண்டின் தொடக் கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடை பெற்றது.
இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவ தற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித் தோழர் அபுமூஸா அல்அஷ்அரீ (ரளி) அவர் களையே சாரும். 

ஏனெனில் அவர்கள் ஓரு முறை உமர் (ரளி) அவர்க ளுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங் களில் தேதியிடப் படாமை குறித்து கேள்வி எழுப்பியி ருந்தார்.

அந்தக் கேள்வியின் விளைவாக உடனடி யாக முஸ்லி ம்களுக் கென்று பிரத்தியேக நாட்காட்டி ஒன்றை உருவாக்க வேண்டியதின் அவசிய த்தை உமர் (ரளி) அவர்கள் உணர்ந் தார்கள்.

எனவே இஸ்லாமிய ஆண்டின் துவக்கம் குறித்து நபித்தோழர் களுடன் ஆலோசி ப்பதற்கான ஒரு கூட்டத்தை உமர் (ரளி) அவர்கள் கூட்டி னார்கள். 

அதில் நான்கு கருத்து க்கள் முன் வைக்கப் பட்டன. நான்கும் நபிகள் நாயகத் தின் வாழ்வை அடிப்படை யாகக் கொண்டி ருந்தன. அவை:

1) பெரு மானாரின் பிறப்பு

2) பெரு மானாரின் இறப்பு

3) பெரு மானார் நபியாக தேர்வு செய்யப் பட்டது


4) பெரு மானார்; (ஸல்) அவர்கள் மக்காவி லிருந்து மதீனா விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெய ர்ந்தது.
இவைக ளில் ஏதாவது ஒன்றை இஸ்லாமிய நாட் காட்டியின் துவக் கமாக எடுத்துக் கொள்ளலாம் என தீர்மானிக்கப் பட்டது. உமர்(ரளி) அவர்கள் 'ஹிஜ்ரத்' தை இஸ்லாமிய ஆண்டு துவக் கமாக தேர்வு செய்தார்கள்.

மற்ற மூன்று நிகழ் வுகளும் இஸ்லாமிய வரலா ற்றிலும், அண்ண லாரின் வாழ் விலும் முக்கிய மானவை தான் என்ற போதிலும் 

அவை அனைத் தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கிய மானது என்பதே உமர் (ரளி) அவர்களின் முடிவுக்கு காரண மாகும்.

காலிஃப்ளவர் மசாலா தோசை செய்வது எப்படி?

ஆண்டுக்கு அடையா ளமாய் சூட்டப் படுவதற்கு மிகவும் பொருத் தமான, அதே நேரத்தில் அழுத்த மான பொருளை தரக்கூடிய பெயரையே உமர் (ரளி) அவர்கள் தேர்வு செய் தார்கள்.

அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரி முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப் படுகிறது.

ஹிஜ்ரத் - விளக்கம்:

ஹிஜ்ரத் என்ற அரபி சொல்லுக்கு 'குடிபெ யர்தல்' என்று பொருள். எல்லா குடிபெ யர்தலும் ஹிஜ்ரத் தான் என்றாலும் 

'மார்க் கத்தை காப்பா ற்றிக் கொள்வ தற்காக' ஒரு ஊரிலி ருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர் வதற்கே இஸ்லா மிய வழ க்கில் ஹிஜ்ரத் என்று சொல்ல ப்படும்.
வல்லான் அல்லாஹ் மனித குலத்தை வழி நடத்திச் செல்ல மனித ர்களிலே சிலரைத் தேர்ந் தெடுத்து, அவர்களை இறைத் தூதராக அனுப்பிய போது அவரை அவரது சமதா யத்தவர் அனைவரும் ஏற்றுக் கொண்ட தாக வரலாறு இல்லை.

தூதரின் மீது நம்பிக்கை கொள்ளாத இறை மறுப்பா ளர்கள் அவரது பிரச்சா ரத்திற்கு எதிர்ப் பாகவும் மேலும் அவரின் உயிரு க்கும் அச்சுறுத் தலாகவும் இருப்பா ர்கள்.

எதிரி களின் அக்கிரம அராஜ கங்கள் எல்லை மீறிப் போக ஆரம்பி க்கிற போது அல்லாஹ் இரண்டு விதமான தீர்வுகளை வகுத்து வைத்தி ருந்தான். 

ஒன்று, எதிரிகளை அழித்து விடுவது, மற்றொன்று, இறைத் தூதரை அவரு டைய சொந்த நாட்டை விட்டு ஹிஜ்ரத் செய்ய வைப்பது.

உதார ணமாக, ஹுது (அலை), ஸாலிஹ் (அலை), லூத் (அலை) ஆகிய நபிமா ர்கள் காலத்தில் எதிர்ப்பு வலுத்த போது எதிரிகளை அல்லாஹ் புயல் காற்று, கல்மழை என பல வழிகளில் அழித்தொ ழித்தான்.

இப்ராஹீம் (அலை), மூஸா (அலை) ஆகியோ ரது உயிருக்கு அச்சுறு த்தல் வலுத்த போது அவர்களை அல்லாஹ் அவர்களது சொந்த ஊரிலி ருந்து ஹிஜ்ரத் செய்ய வைத்தான்.

உலகில் முதன் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் என்கிற பெருமை ஸை யிதுனா இப்ராஹீம் (அலை) அவர் களையே சாரும். 'நான் என் இறைவ னளவில் ஹிஜ்ரத் செய்யப் போகிறேன'

காடை முட்டை சாப்பிட்டால் உடல் அதிக வலிமை அடையும் !

என்று பிரகடன ப்படுத்தி விட்டு அவர் தனது சொந்த நாடான இராக் கிலிருந்து சிரியாவிற்கு குடிபெயர்ந் தார்கள். இது குறித்து அல்லாஹ் பின் வருமாறு அருமறையில் குறிப்பி டுகிறான்.

'நான் என் இறைவ னின் பக்கம் ஹிஜ்ரத் செய்பவ னாக இருக்கிறேன் என்று அவர் (இப்ராஹிம் (அலை) சொன்;னார்'. (அல் குர்ஆன் 29:26).

நபி மூஸா (அலை) அவர்கள் எகிப்தி லிருந்து ஒரு முறை சிரியா விற்கும், மற்றொரு முறை அகபா வளை குடாப் பகுதிக்கும் குடிபெய ர்நதார்கள்.

அந்த வரிசையில் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு அச்சுறு த்தல் ஏற்படும் சூழ்நிலை உருவான போது அவரை அல்லாஹ் மக்கா நகரி லிருந்து மதீனா நகரு க்கு குடிபெயரச் செய்தான்.

ஹிஜ்ரத் - பின்னணியும்;, நிகழ்வும்:

நாளுக்கு நாள் குறைஷி களின் அடக்கு முறையும், அட்டு ழியமும் அதிகமா னதின் காரணமாக முஸ்லிம்கள் கடும் நெருக்கடிக் குள்ளாயினர். 

அவர்க ளுக்கு நிம்மதியளி க்கின்ற வகையில் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய அல்லாஹ் ஆணை யிட்டான்.
அதில் முதலாவதாக அபூஸலமா (ரளி) அவர்களும், அவரை தொடர்ந்து உமர் (ரளி) உள்ளிட்ட பிற ஸஹா பாக்களும் ஒவ்வொ ருவராக ஹிஜ்ரத் செய்ய ஆரம் பித்தனர். 

மதீனாவில் வசித்து வந்த மக்களும் கூட்டம் கூட்டமாக அல்லாஹ் வுடைய மார்க்க த்தில் நுழைய லாயினர்.

கொஞ்சம் கொஞ்ச மாக மக்காவை விட்டு வெளி யேறிய முஸ்லிம்கள் மதீனா வில் ஒன்று கூடி ஒரு சமுதாய அமைப்பைத் தோற்று வித்துக் கொண்டி ருப்பது 

மக்கத்து குறைஷி களுக்கு மிகப் பெரிய கலக்கத்தை மட்டு மன்றி ஆத்திர த்தையும், கோபத் தையும் அதிகப்ப டுத்தியது.

இஸ் லாமிய வளர்ச் சியை எந்த வகையில் தடுத்து அழிப்பது என்பது குறித்து சதியா லோசனைக் கூட்டம் ஒன்றை 'தாருந் நத்வா' என்ற இடத்தில் கூட்டினர். 

ஆலோச னையின் முடிவில் அதன் மூல வேர் (பெரு மானார்) நம்மு டன் தான் இருக்கி ன்றது,

இணைய விபச்சாரம் என்றால் என்ன?

இந்த மூல வேரை அழித்து விட்டால், முழு மரமும் சாய்ந்து விடும். நாம் சந்தி த்துக் கொண்டி ருக்கின்ற பிரச்னை களில் இருந்து முற்றிலும் நாம் நீங்க வேண்டு மென்றால்,

முஹம் மதைக் கொல் வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. 

இந்தக் கொலை யின் மூலம் வரும் எதிர் ப்புகள் மற்றும் இரத்த இழப் பீட்டுக்கு, பழிக்குப் பழி ஆகியவற் றிலிருந்து தங்களைப் பாதுகா த்துக் கொள் வதற்கு,

ஒவ்வொரு கோத்திரத்தா ரிடமிருந்தும் ஒவ்வொரு பிரதி நிதிகளை நியமித்து, அவர்களைக் கொண்ட தொரு கொலைப் படை ஒன்றை உருவாக் குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

ஆனால் இறைவன் நபிகளா ருக்கு இத்திட் டத்தைப் பற்றி அறிவித்து கொடுத்து விட்டான். பெரு மானார் (ஸல்) அவர்கள்,

மக்கள் தம்மிடம் அமானி தமாகத் தந்து வைத்தி ருந்த பொருட்களை யெல்லாம், உரியவ ர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அலீ (ரளி) அவர்க ளிடம் கையளி த்தார்கள்.
இஸ்லாமியப் புத்தாண்டு | Islamic New Year !
மக்காவை விட்டுப் புறப்படும் நிலை யில், நபியவர்கள் வீட்டிலி ல்லை என்பதை உணர்ந்து எதிரிகள் விழித்துக் கொள்ள கூடாது என்பத ற்காக, தமது படுக் கையில் தூங் குமாறு அலி (ரளி) அவர்களை பணித் தார்கள்.

அலி (ரளி) அவர்களும் கண்மணி நாயக த்தின் கட்டளை க்கு கட்டுப் பட்டு, அந்த ஆபத்தான காரிய த்தைப் பொறுப் பேற்று பெருமானா ருக்குப் பதிலாக அவர்களது படுக்கை யில் படுத்துக் கொ ண்டார்கள்.

ஹழ்ரத் அலி (ரளி) உடைய இந்த தியாகம் பற்றி அல்லாஹ் புனித அல்குர்ஆனில் பின் வருமாறு புகழ்ந்து ரைக்கிறான்.

وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207)

இன்னும் அல்லா ஹ்வின் திருப்பொருத் தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவரும் மனித ர்களில் இருக் கின்றார், 

மேலும் அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடி யார்கள் மீது அளவற்ற அன்புடை யோனாக இருக்கி ன்றான். (அல்குர்ஆன் 2:207).

பூமியின் இறுதி நாள் - அறிஞர்கள் தகவல் !

மாலையில் இருள் சூழத் தொடங் கியதும், பெருமானார் (ஸல்) அவர்களின் வீடு முற்றுகை யிடப்பட்டது. வீட்டினுள்ளே அலீ (ரளி) அவர்கள் உறங்கிக் கொண்டிரு க்கிறார்கள்.

ஆயினும், பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரளி) அவர்களுடன் மக்கா வை துறந்து மதீனாவை நோக்கி கிளம்பி னார்கள். 

குறை ஷிகள் காவல் காத்து கொண்டிரு க்கும் நிலை யிலேயே வீட்டின் தலை வாயிலின் வழியாகவே அல்லா ஹ்வின் உதவியால் எதிரிகள் பார்க்கா வண்ணம் அவர்கள் முன்னா லேயே வெளி யேறிச் செ ன்றார்கள்.
விடிந் ததும், வீட்டைச் சூழ்ந்து நின்றிருந்த அந்தக் கொடிய வர்கள், தமது வாட் களை உருவிக் கொண்டு, நபிக ளாரின் வீட்டினுள் நுழைந்து அவர்களது படுக்கை யை தாக்கினர்.

அப்போது, நபிக ளாரின் படுக்கை யில் ஹழரத் அலி (ரளி) யைக் கண்டதும் ஏமாற்ற மடைந் தனர். தங் களுடைய திட்டம் தவிடு பொடியா னதை எண்ணி நொந்து போயினர்.

பெருமா னார் (ஸல்) அவர்கள், ஃதௌர் குகையில் மூன்று நாட்கள் தங்கியிரு ந்தார்கள். பின்பு மதீனா வை நோக்கிப் புறப்பட் டார்கள்.

மக்கா வைச் சேர்ந்த சுராகத் இப்னு மாலிக் என்பவர் குறைஷி களின் கட்டளைப் படி,

பெருமானார் (ஸல்) அவர்களின் காலடித் தளங்களை அடையாள ங்கண்டு அவர்க ளைப் பிடிக்க வந்தார். 

எனினும் பூமி அவரது குதிரை யின் கால் களைப் பிடிக்துக் கொள்ள அவர் கீழே விழுந்தார். மூன்று முறை இவ்வாறு நடந்தது. பின்னர் நபிக ளாரிடம் பாவ மன்னிப்புக் கோரி திரும்பிச் சென்றார்.
மதீனா நகரில் மக்களெ ல்லாம் தங்கள் தலைவரை எதிர் நோக்கிக் காத்திரு ந்தனர். அந்த நாள் ஒரு பெருநா ளுடைய கோலம் பூண்டி ருந்தது. ஒரு வெள்ளிக் கிழமை நாளில்,

பெருமானார் (ஸல்) அவர்கள் மதீன மாநகரை வந்தடை ந்தார்கள். அவர்களை அந்நகர மக்கள், அளப்பற்ற மகிழ்ச்சி யோடு வரவே ற்றார்கள். 

பின்பு அங்கு இஸ்லாமிய சாம்ராஜ் யத்தின் சக்ரவர்த்தி யானார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி.

இதுவே ஹிஜ் ரத்தின் சுருக்க மான வரலாறு. இஸ்லாத்தை வாழ்விப் பதற்கு ஒரு நிலம் தேவை. 

இஸ்லாமிய மார்க்க நெறியைப் பரிபூர ணமாகப் பின்பற்று கின்ற மனிதர்கள் தேவை என்ற அடிப்படை யில் தான் மக்காவை விட்டு மதீனாவுக்கு கண்;மணி நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட் டார்கள்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்த.. ஸ்டீவ் ஜாப்ஸ் !

எந்த உயர்ந்த நோக்கத் திற்காக அவர்கள் பயணப் பட்டார்களோ, அந்த நோக் கத்தை அவர்கள் அடைந்து சாதனைகளைச் சாதித்தும் காட்டினார்கள். 

அந்த சாதனை களைத்தான் இன்ற ளவும் சரித்தி ரத்தின் பக்கங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிரு க்கின்றன.

எந்த சூழ்நிலை வந்த போதிலும், இறை வனின் மீது இருந்த நம்பிக்கை பெருமானா ருக்கு இம்மிய ளவும் குறைய வில்லை. 

எதிரிகள் மிக அருகில் இருந் தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கி றான் என்ற அசைக்க முடியாத

நம்பிக் கையின் காரண மாகத் தான் எதிரிக ளின் கண்களில் இருந்து மறைக்கப் பட்டார்கள். தௌர் குகையில் அவர்கள் அபுபக்கர் (ரளி) அவர்களுடன் இருந்த போது, எதிரிகள் நெருங்கிய போது,

''யாரசூலல்லாஹ். அவர்கள் சற்று கீழே குனிந்து பார்த்தா லும் நம்மை கண்டு கொள்வார்கள்' என்று அபுபக்கர் (ரளி) அவர்கள் கூறிய நேரத்தில்,
'அபூபக்கரே நாம் இருவ ரில்லை! மூவர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்' என உரைத் தார்கள் கண்மணி நாயகம் (ஸல்). 

இந்த நம்பிக் கையால் இறைவன் அவர்களை எதிரி களின் கண்களை விட்டும் பாதுகாத்தான்.

இறை வனின் மீது முழுமை யான நம்பிக்கை மட்டு மன்றி, இந்த ஹிஜ்ரத் மூலம் நமக்கு பல அரிய படிப்பி னைகளும் உள்ளன. அவற்றுள் சில:

திட்ட மிடல்:

ஹிஜ்ரத் எதேச்சை யாக நடந்த ஒன்றல்ல, மாறாக அது முழுக்க முழுக்க சரியான திட்ட மிடலுடன் நடந்தது என்பதை நபிய வர்கள் 

தாம் புலம் பெயர விருப்பதை அபூபக்கர் (ரளி) தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ரகசிய மாய் வைத்தி ருந்தது,

பயணத் தின் போது எதிரிகளை ஏமாற்ற மக்காவி லிருந்து மதீனாவுக்கு வழமை யாய் செல்லும் பாதையில் அல்லாமல் வேறு பாதையில் சென்றது, 

உணவு கொண்டு வரும் பொறுப்பை அஸ்மா பின்த் அபூபக்கர் (ரளி) அவர்க ளிடம் ஒப்படை த்தது என பல்வேறு நிகழ் வுகளை குறிப்பிடலாம்.

இலக்கில் லாமல் செல்லும் இன்றைய இஸ் லாமிய சமூகம், திட்ட மிடலின் முக்கியத் துவத்தை உணர்ந்து தன் பாதையை திட்ட மிட்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி:

திட்ட மிடலில் கவனம் செலுத்திய போதும், அல்லாஹ் வின் உதவியை அதிகம் எதிர் பார்த்த நபிகளாரின் ஹிஜ்ர த்தின் போது அல்லாஹ் பல உதவிகளை செய்தான். 
உதாரண த்திற்கு தன்னை சுராகா என்பவர் துரத்தி வந்த போதும், எதிரிகளின் கண் முன்னே வந்த போதும், 

குகையில் நாம் இருவர் மாத்திரம் இருக்கி றோம் என்று அபுபக்கர் (ரளி) கூறிய போது நம்மோடு அல்லாஹ் இருக் கிறான் என்று உறுதியாக கூறியது போன்ற

சம்பவங் களின் மூலம் நம்மால் முடிந்த அனைத்து காரியங் களையும் செய்து, அல்லாஹ்வின் பால் பொறுப்பு சாட்டும் போது அவன் உதவ கூடிய வனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.
சகோதரத் துவ கட்டு மானம்:

ஹிஜ்ரத் தின் பின் நடைபெற்ற நிகழ்வு களை உற்று நோக்கும் போது நபிகளார் தான் கட்டி எழுப்பிய சமூகத் திற்கு முக்கிய மான அடிப்படை யாக கருதியது சகோ தரத்து வமாகும். 

ஒரு முஃமின் கட்டட த்தை போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு பலமூட்டும் எனும் ஹதீஸுக்கு ஏற்ப பெருமானார் (ஸல்) அவர்கள் 

உருவாக்கிய ஈமானிய சமூகத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபா  டுகளோ அல்லது தேசிய, பிரதேச வாதங்களோ காணப்பட வில்லை.

நபிகளார் உருவாக்கிய சமூகம் தான் இன்று இஸ் லாத்தின் எதிரி களால் முஸ்லீம் கள் மத்தியில் புகுத்தப் பட்ட இன, நிற, பிரதேச, 

தேசிய உணர்வு களால் ஆட்சி யையும், அதிகார த்தையும் இழந்து, பண்பாடும் நாகரீகமும் சீர் குலைந்து நிற்கும் சமூகமாக மாறி யுள்ளது. 

முஸ் லீம்கள் தாங்கள் இழந்த கண்ணி யத்தை மீட்டெடுக்க முதலா வதாக தங்களுக் கிடையான வேறுபா டுகளை மறந்து இஸ்லாமிய கொள்கை யின் அடிப் படையில் ஒன்று படல் வேண்டும்.

எனவே வருங் காலத்தில் நம்மனை வரையும் எதையும் திட்ட மிட்டு செயல்படு பவர்களாகவும், அல்லாஹ்வின் உதவியை நாடி தம் வாழ்வை அமைத்து கொள்பவர் களாகவும், ஒரே இறைவன், ஒரே தலைவர், 

ஓரே மறை, ஓரே கிப்லாவை பின் பற்றும் நாமனை வரும் நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடு களுக்காக மோதிக் கொள்ளா மல், 

இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சி களுக்கு பலியா காமல், ஒற்றுமை யாய் மீண்டும் ஒரு மதீனத்து சமூகம் இம்மண் ணில் அமைய பாடுபடுபவர் களாகவும், 
எல்லாவ ற்றிற்கும் மேலாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாப் பெரும க்களின் மாபெரும் தியாகத்தை இந்தப் புத்தாண்டு மட்டுமல்ல, 

ஒவ்வொரு நாளும் நினைவு கூறக் கூடிய நன்மக் களாக நம் அனை வரையும் வல்லான் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்!
Tags:
Privacy and cookie settings