கியூபாவின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மறைந்தார் !

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அவரது சகோதரரும் கியூபாவின் ஜனாதிபதியுமான ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
கியூபாவின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மறைந்தார் !

பிடல் காஸ்ட்ரோ (ஓகஸ்ட் 13 , 1926 – நவம்பர் 26, 2016) கியூபாவைச் சேர்ந்த பொதுவு டைமைப் புரட்சியா ளரும் பொது வுடைமை அரசியல் வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழி நடத்தி புல்ஜென் சியோ பாட்டிஸ் ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதம ராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதி பதியாகவும் பொறுப்பு வகித்தார்.
கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோ பிப்ரவரி 24. 2008 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.

உலகத் தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. 

சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத் தின் பொதுச் செயலா ளராக இருந் துள்ளார்.

அமெரிக் காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந் தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும்.

இதைவிட ரஷ்யா அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஷ்யாவு க்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

15 ஆம் நூற்றா ண்டில் ஸ்பானிய கொலனித்துவத்தின் கட்டுப் பாட்டில் வந்த கியூபா, 1895 இல் சுதந்தி ரமடைந்தது.

அதைத் தொடர்ந்து அமெரிக்கா வின் ஆதிக்கத் துக்குட் பட்ட பொம்மை அரசுகளால் ஆளப்பட்டு வந்தது.

உடலில் ஏற்படும் சில வினோதமான அறிகுறிகள் - நோயின் அறிகுறியா?

19 ஆம் நூற்றா ண்டிலும் 20 ஆம் நூற்றா ண்டின் முன்னரைப் பகுதியிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவு நாடுகள் ‘வாழை ப்பழக் குடியரசுகள்’ என அழைக்கப் பட்டன.

அமெரிக்க வாழைப் பழக் கம்பெனிகள் இந்நாடு களில் மிகப்பெரிய முதலீடு களைச் செய்து வாழைப் பழத் தோட்டங் களைப் பேணி வந்தன.

அவ்வர சுகளைக் கட்டுப் படுத்தும் வல்லமை பொருந் தியதாக இக்கம் பெனிகள் இருந்தன. இந்நாடு களில் உள்ள மக்கள் மோசமான சுரண் டலுக்கு ஆளாகி னார்கள்.

கியூபாவும் இதற்கு விலக்கல்ல. 1933 இல் கியூப ஜனாதிபதியாக இருந்த ஜெராடோ மச்சாடோ விற்கு எதிரான இராணுவப் புரட்சியில் முக்கிய பங்காற்றிய பல்ஜென்சியோ பட்டீஸ்டா 

இராணுவத்தைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக தொடர்ச்சியாக தெரியப் பட்ட ஜனாதி பதிகளை ஆட்டிப் படைப்ப வராக விளங்கினார்.

1940 இல் ஜனா திபதியாகிய பட்டீஸ்டா தனது பதவிக்காலம் முடிந்தவுடன் 1944 இல் அமெரிக்கா விற்குச் சென்றார்.
1952 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய பட்டீஸ்டா, தேர்தல் தனக்கு சாதகமாக அமையாது என்பதைத் தெரிந்து இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற் றினார்.

பட்டீஸ்டாவின் கொடுங் கோலாட் சியில் 20,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப் பட்டார்கள்.

1953 ஜுலை 26 இல் பிடல் காஸ்ட்ரோவும் 135 தோழர்களும் கியூபாவின் மொன்கடா இராணுவத் தளத்தை தாக்கி பட்டீஸ் டாவுக்கு எதிரான போராட்ட த்தைத் தொடங்கினர்.

ஆனால் அத்தாக் குதல் தோல்வி கண்டது பலர் கொல்லப் பட்டனர். பிடல் காஸ்ட்ரோ, அவர் தம்பி ராகுல் காஸ்ட்ரோ உட்பட ஒன்பது பேர் நீதி மன்றத்தில் விசாரிக் கப்பட்டு, சிறை வைக்கப்பட் பட்டனர்.

பிடல் நீதிமன் றத்தில் தானே தமக்காக வாதாடினார். அப்போதே அவர் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த் தினார்.

ஆயுள் தண்டனை விதிக்க ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்ட காஸ்ட் ரோவும் ஏனை யோரும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக 1955 இல் விடுதலை செய்யப் பட்டனர்.
விடுதலை செய்யப் பட்ட பின்னர் மெக்சிக்கோ சென்ற காஸ்ற்;ரோ, அடுத்த கட்டப் புரட் சிக்குத் தயாரிப்பு செய்தார்.

அங்கேதான் ஏனஸ்ட் சேகுவேரா வின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் தமது இயக்க த்துக்கு ‘யூலை 26 இயக்கம்’ எனப் பெயரி ட்டனர்.

1955 இன் டிசெம்பரில் மெக்சிக்கோ விலிருந்து கிரான்மா என்ற படகில் கியூபா வின் சியாரா மெஸ்திரா மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து நாட்டில் மீண்டும் புரட்சிக் கான பன்முகத் தயாரிப்புகள் செய்யப்பட்டது. கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் மெது மெதுவாக முன்னேறினர். மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது.

1958 டிசெம்பர் 31 ஆம் திகதி சர்வா திகாரி பட்டீஸ்டா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். 

1959 ஜனவரி எட்டாம் திகதி 33 வயது நிரம்பிய பிடல் காஸ்ற் ரோவும் அவரது தோழர்களும் கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் பிரவேசித்தனர்.

புரட்சி வெற்றி யடைந்தது. கியூபப் புரட்சி உலக வரலாற்றின் திசை வழியை மாற்றிய முக்கிய மான ஒரு நிகழ் வாகும்.

1917 ஆம் ஆண்டு லெனின் தலைமை யில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உலகமே திரும்பிப் பார்த்து, நம்பிக்கை கொண்ட ஒரு நிகழ்வு கியூபப் புரட்சி யாகும்.
Tags:
Privacy and cookie settings