500, 1000 செல்லாது அறிவிப்புக்கு யோசனை கொடுத்த அனில் போகில் !

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தவுடன், பல கோடி மக்க ளுடன் புனேவைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனில் போகிலும் மகிழ்ச் சியில் திளைத்தார். 
500, 1000 செல்லாது அறிவிப்புக்கு யோசனை கொடுத்த அனில் போகில் !
தற்போது, அவர் கொடுத்த ஐடியாக் களில் மோடி இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டதாக அதிருப் தியில் உள்ளார். 

கடந்த 16 வருடங்களாக அனில் போகிலும் அவரது குழுவினரும் நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அவற்றை ஒழிப்பதற்கான ஐடியாக் களுடன் நாட்டில் உள்ள முக்கிய அமை ச்சர்கள், மத்திய வங்கி அதிகாரிகள், மதத்தலைவர்கள் முதலிய வர்களைச் சந்தித்து தங்களது முயற்சி களுக்கு ஆதரவு கேட்டனர்.

அப்படித் தான் கடந்த ஜூலை மாதம், பிரதமர் மோடியை இரண்டு நிமிடங்கள் சந்தித்து... கறுப்புப்பண ஒழிப்புக்கான ஐடியாக்களை அனில் போகில் தெரிவித்துள்ளார். 

அவர், சொன்ன ஐடியாக்களில் முக்கியமான ஒன்று... அதிக மதிப்புள்ள 1,000, 500 ரூபாய் நோட்டு களை ஒழிப்ப தாகும். அவருடைய ஐடியாக்களால் ஈர்க்கப்பட்ட மோடி, அந்தச் சந்திப்பை மேலும் இரண்டு மணி நேரங்களுக்கு நீட்டித்தார். 

இது, நடந்து நான்கு மாதங்கள் கழித்து 1,000, 500 ரூபாய் நோட்டு களுக்கு மோடி தடை விதித்தார். முழுமை யாக வரவேற்க முடியாது!
தற்போது பணத்துக்காக மக்கள், வங்கிகளிலும்... ஏ.டி.எம்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், கறுப்புப் பண ஒழிப்புக்காக ஐந்து அம்சத் திட்டங் களை பிரதமரிடம் தெரிவித்தேன். 

ஆனால், அதில் இரண்டை மட்டுமே அரசு நடை முறைப்படுத்தி உள்ளது. அதுவும் நன்கு சிந்திக்காமல், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் திடீரென நடை முறைப்படுத்தி உள்ளனர். 

மோடியின் இந்த நடவடிக்கையை எங்களால் முழுமையாக வரவேற்க முடியாது. அதே சமயம், நிராகரிக்கவும் முடியாது. 

நாங்கள் அளித்த ஐந்து அம்சத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி இருந்தால், மக்களுக்கு இவ்வளவு சிரமங்கள் வந்திருக்காது என கடுமை யாக விமர்சித் திருக்கிறார் அனில் போகில்.

மத்திய அரசுக்கு அனில் போகில் அளித்த ஐடியா க்களில் சில...

50 ரூபாய் நோட்டுக்கு மேலே உள்ள அனைத்து அதிக மதிப்புடைய நோட்டு களையும் தடை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மறை முக வரி களையும் ரத்து செய்ய வேண்டும்.

பணப் பரிவர்த் தனைகள் அனை த்தையும் வங்கிகள் வழியா கவே செய்ய வேண்டும். வரிகள் வசூலிப்பத்தை BTT எனும் வங்கிப் பரிவர்த் தனை மூலமே செயல் படுத்த வேண்டும்.
இவை அனைத் தையும் செயல் படுத்தியி ருந்தால், சாமான்ய மக்கள் பயனடை வதுடன், நாட்டில் நிர்வாக அமைப்பிலும் நல்ல மாற்றங்கள் வந்திருக்கும். 

இந்த நடவடிக்கைகள், கறுப்புப் பணத்தையும். கள்ள நோட்டு களையும் வேண்டும் என்றால் ஒழிக்கலாம். 

அதே சமயம், இது சாமான்ய மக்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி யுள்ளதுடன், நாட்டில் உள்நாட்டு உற்பத்தி யையும் பாதித்திருக்கிறது எனவும் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் அனில் போகில்.
Tags:
Privacy and cookie settings