ஆம்னி பேருந்துகள் கூடுதலாக வசூலிக்க கூடாது... உயர் நீதிமன்றம் !

பண்டிகைக்கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதலாக ஒரு பைசா கூட வசூலிக்க அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் கூடுதலாக வசூலிக்க கூடாது... உயர் நீதிமன்றம் !
பிற மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக உள்துறை செயலர் இன்று (புதன் கிழமை) பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டி ருந்தது.

இந்த வழக்கு இன்று (புதன் கிழமை) விசாரணைக்கு வந்த போது ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க விதிகள் இருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையு யர்வை கருத்தில் கொண்டு பண்டிகைக் காலங் களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அனும திக்க வேண்டும்.

கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது வசூலிக்கப் பட்டதைவிட வெறும் 10% மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்ட மிட்டுள்ளோம். 
இது நியாய மான உயர்வே. ஏற்கெனவே ஆம்னி பேருந்து களை நட்டத்தில் தான் இயக்கிக் கொண்டிரு க்கிறோம். இந்நிலை யில், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிப்பது ஏற்புடையதல்ல. 

பண்டிகை காலங்களில் மட்டும் கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்வது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் எடுத்துரை த்திருக்கிறோம். 

அவர்களும் எங்களது நிலையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என வாதிட்டார். 

அரசு தரப்பில் நியமிக்கப் பட்ட சட்ட உதவி யாளர் கூறும் போது, ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் கூறுவது போல் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் எந்தக் கூட்டமும் நடைபெற வில்லை. 

மேலும், ஆம்னி பேருந்துகள் கட்ட ணத்தை மாநில அரசே நிர்ணயிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. 
மும்பை உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் வழங்கிய தீர்ப்பின்படி மாநில அரசு பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க முடியும் என்றார்.

இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிமன்றம், பண்டிகைக் கால கூட்ட நெரிசலை சுட்டிக் காட்டி ஆம்னி பேருந்துகள் ஒரு பைசா கூட கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடியாது. 

ஆம்னி பேருந்து களை நட்டத்தில் தான் இயக்கிக் கொண்டிரு க்கிறோம் எனக் கூறுகிறீர்கள். அப்படியி ருக்கும் போது எதற்காக அந்தத் தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டும். 

இந்த வழக்கில் நீதிம ன்றத்தில் இடைக்கால உத்தரவு பிற்பகலில் வழங்க ப்படும்" எனத் தெரிவித் துள்ளது.

நீதிமன்ற த்தின் இந்த கருத்தால், ஆம்னி பேருந்துகள் பண்டிகைக் காலங்க ளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தாமாகவே முன்வந்து..
தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்ப டுவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. 

இது தொடர்பாக பதிவாளர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

அப்போது நீதிமன்றத்தில் மதுரை வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் கல்யாண குமார், மதுரை மத்திய வட்டார போக்கு வரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோரிடம் 

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அவர்கள், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பஸ்களில் அதில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப் படுகிறது.
பண்டிகை நாட்கள், விடு முறை நாட்களில் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டு விதி மீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப் படுகிறது என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றனர். 

அதற்கு, கட்டணம் நிர்ணயம் தொடர்பாக இது வரை அரசாணை எதுவும் இல்லாத தால் நடவடி க்கை எடுக்க இயல வில்லை என தெரிவிக்கப் பட்டது.

இதை யடுத்து, பிற மாநிலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்யும் போது, 
தமிழகத்தில் அரசு ஏன் ஆம்னி பஸ்களின் கட்டண த்தை நிர்ணயம் செய்ய வில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

பின்னர் இது தொடர் பாக உள்துறை செயலர், போக்கு வரத்துத் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தர விட்டனர்.
Tags:
Privacy and cookie settings