ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் நோய் இது தானா?

இன்றோடு ஒரு மாதமா கிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகின்றது. 
ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் நோய் இது தானா?
1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோ வில் ஒரு மாதம் வரை சிகிச்சைக் காகத் தங்கி இருந்தார். 

அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். கடந்த செப் 22ல் அப்போலோ வின் விஐபி க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனு மதிக்கப் பட்டார்.

அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறை பாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட் பட்ட மூச்சுக் குழாய் அழற்சி, 

சுவாசப் பிரச்சினை இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ.

அது தொடர்பான சிகிச்சைகளு க்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லி யிலிருந்து நிபுணத் துவம் பெற்ற பல டாக்டர்கள் வரவழைக்கப் பட்டனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 10ல் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருக்க வேண்டும் 

என்ற செய்தியுடன் தனது அறிக்கைப் படலத்தைத் தற்காலிகமாக முடித்துக் கொண்டது அப்போலோ.
நீண்ட நாட்கள் என்பது எத்தனை நாள் என இறுதி செய்யப்படாத நிலையில் முதல்வரது அப்போலோ வாசம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. 

முதல்வருக்கு உடலில் இது தான் சிக்கல் என்று இன்றளவும் எதுவும் தெளிவு படுத்தப்பட வில்லை.

முதல்வருக்கு நுரையீரல் வீக்கமா?

இந்நிலையில் ஜெயலலிதா வின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உட்கார்ந்திருக்கிறார். மயக்க நிலையில் வைத்திருக்க மருந்துகள் எதுவும் தரப்பட வில்லை.

இது அவரது உடல் நிலையில் ஏற்பட் டுள்ள பெரிய முன்னேற்றம் என்கிற தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன. 

மேலும் அவர் நுரையீரல் நீர் வீக்கத்திற்காகத் தான் மருத்துவ மனையில் தங்கி நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து வருகிறார். 

தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழு, மருந்தின் அளவுகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதால் தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.
அதிகார பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்பட வில்லை என்றாலும் மருத்து வர்கள் வட்டாரமே இந்த தகவலை வெளிப்படுத் தியுள்ளது. 

பல்மனரி எடீமா (Pulmonary Oedema) எனப்படும் இந்நோய் நுரையீரலின் சுவாசப் பைகளில் அதிகமான நீர்க்கோர்ப்பு ஏற்படுவதால் உண்டாகிறது.

இதயத்திலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடு பாதிக்கும். 

அதன் காரணமாக சுவாசப் பைகளில் திரவங்களின் சேர்மாணம் ஏற்படும். அது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும். நுரையீரலை வீக்கப் படுத்தும்.

இரத்தக் குழாயினுடைய செயல் பாடுகளை சரி செய்வது மட்டுமே இதற்கான சிகிச்சை முறை. 

திடீரென அதிகமாக வியர்ப்பது, மூச்சுப் பிரச்சினை, சில நேரங்க ளில் இருமல் ஏற்படும் போது இரத்தம் கசிவது, 

சருமம் வெளுத்துப் போவது இவை தவிர கால்கள் வீங்கி கொள்வது, கல்லீரல் வீக்கம், மூச்சு விடும்போது ஒரு விதம் சத்தம் ஏற்படுவது, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல் கள் ஏற்படும்.
இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கை யில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், மூச்சு பிரச்னைக்கான சிகிச்சை நிபுணர்கள்,

தொற்று நோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை குழுவினர் 

உள்ளடங்கிய மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகத் தெளிவுபடுத்தி யுள்ளது.

இருப்பினும் முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? எப்போது மருத்துவ மனையிலிருந்து வெளியேறுவார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் அதில் இல்லை.

நீண்ட நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று சொல்லி இருந்தார்கள். அது இன்னும் நீண்டபடி.
Tags:
Privacy and cookie settings