பெண்களை கேலி செய்தால் வழக்கு | If teasing women Case !

ஆந்திரா வில் பெண்களை கேலி செய்ப வர்கள் (ஈவ் டீசிங்) மீது குண்டர் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படும் என அம்மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் எச்சரித் துள்ளார்.
விஜய வாடாவில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய தாவது:

ஆந்திரா வில் பெண்களை கேலி செய்யும் சம்பவ ங்கள் அதிகரித்தி ருப்பதாக தெடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே இதைத் தடுத்து நிறுத்தி குற்றவாளி களை பிடிக்கும் 

வகையில் பள்ளி, கல்லூரிகள், பஸ் மற்றும் ரயில் நிலையங் களில் சாதாரண உடை யணிந்த பெண் போலீஸார் நிற்க வைக்கப் பட்டுள்ளனர். கல்லூரி பகுதிக ளில் போலீஸா ரின் ரோந்து பணிகளும் தீவிரப் படுத்தப்பட் டுள்ளன.
பெண்களை பின் தொடர்ந்து கேலி செய்தாலோ அல்லது தொலைபேசி மூலம் அழைத்து தொல்லை கொடுத்தாலோ சம்பந்தப் பட்ட இளைஞர் களின் பெற்றோர் களை நேரில் அழைத்து எச்சரிப்போம். 

அதையும் மீறி தொல்லை கொடுக்கும் இளைஞ ர்கள் மீது குண்டர் சட்ட த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் படும். கடந்த 2 நாட்களில் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு டிஜிபி சாம்பசிவ ராவ் கூறினார்.
Tags: