ஒரு வயது குழந்தையை கொல்ல முயன்ற தந்தை !

ஒரு வயது குழந்தை யை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தந்தை கைது செய்யப் பட்டார். ஒக்கியம் துரைப் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். ஆட்டோ டிரைவர். 
இவரது மனைவி சுபலட்சுமி. இவர்க ளுக்கு லிங்கேஸ் வரன் என்ற மகனும், ஒரு வயதில் நிக்கிதா என்ற மகளும் உள்ளனர். 

கருத்து வேறுபாடு காரணத் தால் கணவரை பிரிந்த சுபலட்சுமி கடந்த 6 மாதமாக அபிராம புரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். 

நேற்று மாலை பூபாலன் மனை வியை சமாதானம் செய்து ஆட்டோ வில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண் டிருந்தார். 

ஆட்டோ வில் குழந்தை நிக்கிதாவும் இருந்தது. ராஜா அண்ணா மலைபுரம் விசாலாட் சித் தோட்டம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது ஆட்டோ விலேயே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட் டுள்ளது.
ஆத்திர மடைந்த பூபாலன் குழந்தை நிக்கிதா வின் கழுத்தை நெரித் துள்ளார். குழந்தை மயங்கி யுள்ளது. 

இதை யடுத்து அபிராம புரம் காவல் நிலையத் துக்குச் சென்ற பூபாலன் குழந்தை யை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித் துள்ளார். 

அதிர்ச்சி அடைந்த போலீ ஸார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தை மயக்க நிலையில் இருந் துள்ளது. 

இதனைத் தொடர்ந்து போலீஸார் குழந்தை யை சிகிச்சைக் காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். குழந்தையை கொலை செய்ய முயன்ற குற்றத்திற் காக பூபாலனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings