ராம்குமார் 'தற்கொலை' செய்து கொண்ட இடம் | Ram 'suicide' who committed the location !

சென்னை புழல் சிறையில் ராம்குமார் வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்ட இடம் இது தான் என்று கூறி சமூக வலை தளங்களில் சில புகைப் படங்கள் வெளியாகி வருகி ன்றன.
இதுகுறித்து தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட் டுள்ளது. அதில் ராம்குமார் இந்த சிறை அறையில் தான் இருந்தார் என்றும், இந்த இடத்தில் உள்ள சுவிட்ச் பாக்ஸைத் தான் உடைத்து வயரைக் கடித்துக் கொண்டதாக சிறை அதிகாரிகள் கூறியதாக அச்செய்தி யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ராம்குமாரி ன் மரணம், சுவாதி கொலையை விட மர்மம் நிறைந் ததாக உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது மிகப் பெரிய புதிராக மாறி யுள்ளது.

தங்களது மகனை கொலை செய்து விட்டதாக ராம்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகி ன்றனர். பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்பு களும் கூட இது கொலை என்று தான் கூறி வருகின்றன.

இந்த நிலையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட இடம் என்று கூறி சில புகைப் படங்கள் வெளியாகி யுள்ளன. இதை நியூஸ் மினிட்டும் வெளியிட் டுள்ளது.

இரண்டு போட்டோக் கள் இதில் உள்ளன. லாங் ஷாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படத் தில் நீண்ட காரிடார் தெரிகிறது. அதன் குளோசப் படத்தில் அறைக்கு வெளியே சுவிட்ச் பாக்ஸ் ஒன்று உடைக்கப் பட்டு வயர்கள் தொங்குவது போலத் தெரிகிறது. 

இந்த வயரைத் தான் பிடித்துக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதா சொல்லப் படுகிறது. இந்தப் படங்க ளின் நம்பகத் தன்மை தெரியவி ல்லை. இது புழல் சிறை அறையா, இங்குதான் ராம்குமார் தங்கியி ருந்தாரா என்பது தெரிய வில்லை

இருப்பினும் இந்த இடத்தில் தான் ராம்குமார் தங்கியிருந் ததாகவும், இந்த சுவிட்ச் பாக்ஸைத் தான் உடைத்து வயரைக் கடித்து உயிரிழந் ததாகவும் பெயர் சொல்ல விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியி ட்டுள்ளது.

ராம்குமார் மரணம் தொடர்பாக பல குழப்பங்கள், கேள்விகள், சந்தேகங் கள் நிலவி வரும் நிலையில் தற்போது ராம்குமார் கடித்துக் கொண்ட தாக கூறப்படும் வயர் குறித்த படங்கள் வெளியாகி யுள்ளது புதிய பரபரப்பைக் கிளப்பி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings