ஆபாச படங்களை வைத்து இணையத்தளம் நடத்திய தம்பதி !

சென்னையில் ஆபாச கட்டண வலைத்தளம் நடத்தியதாக ஒரு தம்பதியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆபாச படங்களை வைத்து இணையத்தளம் நடத்திய தம்பதி !
சென்னையில் வசித்து வரும் ஒரு தம்பதியர் குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத் தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தெரிய வந்தது. 

இதை யடுத்து, அந்த வலைத் தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை கண்டுபி டித்தனர். 

இதை தொடர்ந்து, சென்னை அருகேயுள்ள சோழிங்க நல்லூரில் வீட்டில் இருந்த படி ஒரு தம்பதியர் இரண்டு வலைத் தளங்களில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்வது காவல் துறையினரின் சோதனையில் தெரிய வந்தது.

இந்த வலைத் தளங்களை பார்வை யிட வரும் வாடிக்கையா ளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள் ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப் பட்டதையும் விசாரணையில் கூறியுள்ளனர். 

இதை யடுத்து, இந்த ஆபாச வலைத் தளங்களை நடத்தி வந்த சித்தாத்தா வேலு மற்றும் அவரது மனைவி பிரிசில்லா மார்கிரெட் தன்ராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். 

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings