உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் குடலை சுத்தம் செய்வது எப்படி?

செரிமான மண்டலத்தின் ஒரு பாகம் தான் குடல். உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை குடல் தான் உறிஞ்சும். ஒருவரது குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் ஆரோக்கி யமாக இருக்கும்.
உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் குடலை சுத்தம் செய்வது எப்படி?
ஆனால் தற்போது தான் உட்கொண்டு வரும் ஆரோக்கியமற்ற உணவுகளால் குடல் சுவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவதோடு, குடலில் நச்சுக்களின் தேக்கமும் அதிகரிக்கிறது.

ஒருவரது குடல் ஆரோக்கி யமாக இல்லா விட்டால், அதனால் நாம் நினைத் துப் பார்க்க முடியாத வாறான பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். 

ஆகவே ஒருவர் தங்களது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டும்.

குடலை சுத்தம் செய்ய உணவுப் பொருட் கள் மற்றும் பானங்கள் தான் உதவும். இப்போது நாம் குடலை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை வழி களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். 
இங்கு ஒரு சில பானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்களை தினமும் பருகி வந்தால், குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

1. சிறிது ஆப்பிளை மிக்ஸி யில் போட்டு அரைத்து சாறு எடுத்து, பருக வேண் டும். பின் 30 நிமிடம் கழித்து ஒரு டம்ளர் நீரைப் பருக வேண்டும். இப்படி ஒரு நாளை க்கு பல முறை இச்செயலைப் பின்பற்ற லாம். 

ஆனால் இச்செயலை தொடர்ந்து 2-3 நாட்களில் பின்பற்றி னால், குடல் வேகமாக சுத்தமாகும். ஆனால் குடலை சுத்தம் செய்ய இந்த முறையை முயலும் போது திட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

2. ஒரு டம்ளர் வெது வெதுப் பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேவை யான அளவு தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்  றில் பருக வேண்டும். 
உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் குடலை சுத்தம் செய்வது எப்படி?
இப்படி செய்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப் பதோடு, குடலிய  க்கம் சீராக செயல் படும். மேலும் குடலும் சுத்தமாகும்.

3. குடலை சுத்தம் செய்ய முயலு பவர்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான ராஸ்ப்பெர்ரி, பேரிக்காய், ஆப்பிள், பட்டாணி, ப்ராக்கோலி, தானியங்கள், நட்ஸ், விதைகள், பீன்ஸ் போன்ற வற்றை உட்கொள்ள வேண்டும். 

இதனால் இந்த உணவு களில் உள்ள நார்ச்சத்து, குடலை சுத்தம் செய்து, நச்சுமிக்க டாக்ஸின் களை வெளியேற்றி, குடலியக் கத்தை மேம்படுத் தும்.
மிருகங்களுடன் பாலியல் - இது ஒரு விதமான மனநோயா?
4. குடிக்கும் நீரின் அளவை அதிகரித் தால், குடலில் நகராமல் தேங்கியுள்ள கழிவுகள் மென்மை யாக்கப் பட்டு வேகமாக வெளியேற் றப்படும். 

குடலில் இருந்து கழிவுகள் வேகமாக வெளி யேற்றப் பட்டால், குடல் ஆரோக்கி யம் தானாக மேம்படும். எனவே தினமும் தவறால் 3 லிட்டர் தண்ணீரைப் பருகுங்கள்.

5. இஞ்சி வயிற்று உப்புசத்தை மட்டுமின்றி, குடலின் செயல்பாட் டையும் தூண்டி, குடலில் நச்சுக்கள் தேங்கு வதைத் தடுக்கும். அதற்கு வெதுவெதுப் பான நீரில், இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் 2-3 முறை பருக வேண்டும். 
உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் குடலை சுத்தம் செய்வது எப்படி?
இல்லா விட்டால் இஞ்சி துண்டை வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்கலாம். ஆனால் இச்செயலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்றக் கூடாது.

6. குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது 3 நாட்க ளுக்கு பதப்ப டுத்தப் பட்ட ஆரோக்கி யமற்ற உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். 

மேலும் காய்கறி களான கேரட், முட்டைக்கோஸ், பசலைக் கீரை, தக்காளி, வெள்ளரிக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகளில் பிடித்ததை அரைத்து சாறு எடுத்து, அதனை தினமும் பலமுறை பருக வேண்டும். இதனா லும் குடல் சுத்த மாகும்.

7. கற்றாழை ஜூஸ் அல்லது ஜெல்லை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு எலுமிச்சை யைப் பிழிந்து நன்கு கலந்து, 2-3 மணிநேரம் கழித்து அதனைப் பருக வேண்டும். 

இப்படி தினமும் பின்பற்றி வந்தால், குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப் பட்டு, குடலின் ஆரோக் கியம் மேம்படும்.

8. தயிரில் உள்ள புரோபயோடிக் ஸ் மற்றும் நல்ல பாக்டீரியா, குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் தயிரில் கால்சியம் வளமாக உள்ளதால், 
இது குடலில் வளரும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, குடல் பிரச்சனை களைத் தடுக்கும். எனவே குடல் சுத்தமாக வேண்டு மானால், தினமும் தயிரை ஒரு கப் உட்கொ ண்டு வாருங்கள்.

9. ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்து ஆளி விதையை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் மற்றும் 
உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் குடலை சுத்தம் செய்வது எப்படி?
இரவு படுப்பதற்கு 30 நிமிடத் திற்கு முன் என இருவேளை பருக வேண்டும். இதனாலும் குடல் சுத்தமாவ தோடு, ஆரோக்கி யமும் அதிகரிக்கும்.

10.  ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலை யில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். 

இப்படி வாரம் ஒரு முறை பருகி வந்தால், குடலில் உள்ள தீங்கு விளை விக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவ தோடு, குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Tags: