ஓணம் பண்டிகை செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை !

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன் கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப் படுகிறது.

உள்ளூர் விடுமுறை க்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம்  மற்றும் சார்நிலை கருவூலங்கள்

குறிப்பிட்ட பணியாளர் களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings