10 பெண்களை ஏமாற்றி காதலித்த நபர் !

சென்னை யில் 10 க்கும் மேற்பட்ட இளம்பெண் களை ஏமாற்றி காதலித்து அவர்க ளுடன் நெருக் கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை 'பேஸ் புக்கில் வெளியி ட்ட காதல் மன்னனை போலீசார் தேடி வருகிறா ர்கள். 
10 பெண்களை ஏமாற்றி காதலித்த நபர் !
சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் கன்யா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவரது தாயார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று இரவு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனு வில், தனது மகளின் ஆபாச புகைப் படத்தை சாமுவேல் என்ற இளைஞர் தனது 'பேஸ் புக்'கில் வெளி யிட்டு விட்டார். அந்த இளைஞர் எனது மகளை காதலிப் பதாகச் சொல்லி அடிக்கடி பின்தொ டர்ந்து வந்து ள்ளார். 

எனது மகள் அவரது காதலை ஏற்க வில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது பேஸ்புக்கில் எனது மகளின் புகைப்ப டத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித் தரித்து வெளியி ட்டுள்ளார். 

இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம் பெண்களின் ஆபாச புகைப் படங்களையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது சிந்தாதிரிப் பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். 

புகார் கூறப்பட்ட சாமுவேல் என்ற இளைஞரை அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடிய போது, அவரது வீடு பூட்டிக் கிடந்தது. அவர் தப்பியோடி விட்டதாக தெரிகிறது.

போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி உல்லாச லீலைகளில் காதல் மன்னன் சாமுவேல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. 

காதல் மன்னன் சாமுவேல் பிடிபட்டால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings