பிகினி உடையில் திருடனை பிடித்த பெண் போலீஸ் !

ஸ்வீடனைச் சேர்ந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் பிகினி உடையில் திருடனைத் துரத்திப் பிடித்து மடக்கிய செயல் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
பிகினி உடையில் திருடனை பிடித்த பெண் போலீஸ் !
இது தொடர்பான படமும் வைரல் ஆக பரவி வருகிறது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்தவர் மிகேலா கெல்னர். இவர் போலீஸ் அதிகாரி. சம்பவத்தன்று தனது தோழிகளுடன் கடற்கரை ஒன்றில் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்தார் கெல்னர்.

அப்போது கெல்னரும், அவரது தோழிகளும் இருந்த இடத்திற்கு வந்த ஒரு நபர் திடீரென அங்கிருந்த செல்போன் ஒன்ற எடுத்துக் கொண்டு ஓடினார். 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கெல்னர் சட்டென சுதாரித்துக் கொண்டு அப்படியே திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். மின்னல் வேகத்தில் ஓடிய அவர் திருடனை மடக்கிப் பிடித்து கீழே தள்ளினார். 

திருடன் எழுந்து விடாத வகையில் மடக்கி அமுக்கி பிடித்துக் கொண்டார். அப்படியும் விடாத திருடன் தப்ப முயல, கட்டிப்புரண்டு அவனை எழுந்து ஓடி விடாத வகையில் மடக்கி விட்டார் கெல்னர். 
பின்னர் போலீஸார் வந்து திருடனைப் பிடித்துச் சென்றனர். பிகினி உடையில் திருடனுடன் போராடி தைரியமாக மடக்கிப் பிடித்த அப்பெண் போலீஸாருக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றனவாம். 

இது குறித்து அப்பெண் போலீஸ் அதிகாரி கூறுகையில், 11 வருடமாக போலீஸ் அதிகாரியாக உள்ளேன். 

இப்போது தான் முதல் முறையாக பிகினி உடையில் திருடனைப் பிடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
Tags:
Privacy and cookie settings