தெருநாய்கள் கடித்து குதறி இறந்த மூதாட்டி !

கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயரிழந்தார்.
தெருநாய்கள் கடித்து குதறி இறந்த மூதாட்டி !
கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள புல்லுவிலாவில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க ஷிலும்மா என்ற மூதாட்டியை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. 

நாய் கடியால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த மூதாட்டியை அவரது மகன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். அங்கு ஷிலும்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags:
Privacy and cookie settings