நடிகர் அருண் விஜய் கைது !

போதையில் கார் ஓட்டி, போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டார். ஆக., 26ல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பிரபல நட்சத்திர ஓட்டலில், 
நடிகர் அருண் விஜய் கைது !
நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகர், நடிகையருக்கு மது விருந்து அளிக்கப்பட்டது; அதில், நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டார்.

செம போதை

விடிய விடிய நடந்த மது விருந்தை முடித்து, அதிகாலை, 3:00 மணியளவில், அருண் விஜய், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தன் வீட்டுக்கு காரில் கிளம்பினார். 

செம போதையில் கார் ஓட்டிய அவருடன், மனைவி ஆர்த்தியும் பயணித்தார்.

தாறுமாறான வேகத்தில் ஓடிய அவரது கார், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, அங்கு நின்றிருந்த போலீஸ் வேன் மீது மோதியது; இந்த விபத்தில், போலீஸ் வேனும், காரும் சேதம் அடைந்தன.
வழக்கு பதிவு

அங்கிருந்த போலீசார் ஓடி வந்து, அருண் விஜய்யை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 

குடி போதையில் வாகனம் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தர விட்டனர்.

தகவல் அறிந்து, அவரது அப்பாவான நடிகர் விஜயகுமார், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தார். 

பின்னர், அப்பாவின் காரில், பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு வருவதாக, அருண் விஜய் கூறினார்; ஆனால், அங்கு செல்லாமல், அருண் விஜய் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு, போலீசார் பல முறை அழைத்தும், அருண் விஜய் வரவில்லை; அவரது அலைபேசியும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. 

இதனால், தனிப்படை அமைத்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் அரவிந்தன்முன், அருண் விஜய் சரணடைந்தார். 

அவரை போலீசார் கைது செய்து, பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அருண் விஜய், 'போலீசாரின் விசாரணைக்கு
Tags:
Privacy and cookie settings