10-ம் வகுப்பு மாணவனுடன் தென்காசி ஆசிரியை.. மாயம் !

தென்காசி அருகே கடந்தாண்டு மாயமான தாக தேடப்பட்டு வந்த ஆசிரியை யும், மாணவரை யும் திருப்பூரில் வைத்து போலீசார் கைது செய்து ள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார்.

மத்திய போலீஸ் படையில் போலீஸ் காரராக பணியாற்றி வரும் இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுடைய 15 வயது மகன், தென்காசி ஈனாவிலக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எஸ். எஸ்.எல்.சி. படித்து வந்தான். 

கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி அன்று பள்ளிக்குச் சென்ற அம்மாணவன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த பெற்றோரின் புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, மாயமான மாணவனும் அவனுடைய வகுப்பு ஆசிரியையான செங்கோட்டை காலாங்கரை பகுதியைச் சேர்ந்த கோதைலட்சுமியும் (29) காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடியதும் தெரியவந்தது.

இதற்கிடையே, சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'என் மகனை அவர் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை கோதை லெட்சுமி (29) கடத்திச் சென்றுள்ளார். 

அவரால் என் மகன் உயிருக்கு ஆபத்துள்ளது' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நெல்லை எஸ்.பி. ஆஜராகி, இந்த வழக்கை புளியங்குடி டி.எஸ்.பி. விசாரித்து வருவதாக தெரிவித்தார். 
இந்நிலையில் ஆசிரியை கோதைலெட்சுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தையும் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் புளியங்குடி டி.எஸ்.பி.யும் நேரில் ஆஜராகி, இருவரையும் தேடி வருவதாகக் கூறினார்.

பின்னர் ஆசிரியை மற்றும் மாணவனை 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 

 இந்நிலையில், ஆசிரியை கோதையும், அம்மாணவரும் தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு சென்று வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

உடனடியாக திருப்பூருக்கு விரைந்து சென்ற கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவர்களைக் கைது செய்துள்ளனர்.
Tags: