எம்எல்ஏக்கள் விடுதியில் அன்று தரையில்.. இன்று 9-வது மாடியில்.. கருணாஸ் !

படுக்க இடமில்லாமல் எம்எல்ஏ விடுதி வளாகத்தில் படுத்துறங்கிய என்னை அதே கட்டிடத்தின் 9-வது மாடியில் தங்க வைத்தவர் முதல்வர் ஜெயலலிதா’ என சட்டப்பேரவையில் நடிகர் கருணாஸ் உருக்கமாகப் பேசினார்.
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகரு மான கருணாஸ் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை 

சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்முறையாக அவர் பேசினார்.

தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆசியோடு தனது பேச்சை தொடங்குவதாக குறிப்பிட்ட கருணாஸ், ‘‘சென்னையில் தங்க இடம் இல்லாமல் எம்எல்ஏ விடுதி வளாகத்தில் காவலர்களுக்கு தெரியாமல் நாய்களோடு படுத்து உறங்கினேன். 

அப்படிப்பட்ட நான் இன்று எம்எல்ஏவாக அதே விடுதி யின் 9-வது மாடியில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம்’’ என உருக்கமாகப் பேசினார்.

திருவாடானை தொகுதியின் முக்கியப் பிரச்சினையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண் டும். வறண்ட ராமநாதபுரம் மாவட் டத்தில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Tags:
Privacy and cookie settings