பாடி ஆர்ட்.... கன்னங்களில் துளை போட்டு கொண்ட வாலிபர் !

ஜெர்மனியை சேர்ந்த மாடல் ஜோய் மிக்லர் ( வயது 23) இவர் உடம்பில் வித்தியாசமான ஓவியங்களை பச்சையாக குத்தி கொள்வதில் ஆர்வம் உள்ளவர். 
இவர் உடம்பில் 13 வயது முதல் வித்தியாசமான படங்களை பச்சையாக குத்தி வருகிறார். தற்போது இவர் பாடி ஆர்ட் என்ற ஆர்வத்தில் செய்துள்ள விஷயங்கள் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் எற்படுத்தி உள்ளது.

முதலில் இவர் தனது காது மடலகளில் வளையங்களை குத்தி கொண்டார். பின்னர் அவர் தனது நாக்கை கிளையாக பிரித்து வெட்டி கொண்டார்.பிரகு வர தனது கன்னங்களின் இருபுறமும் பற்களும் நாக்கும் தெரியுமாறு ஒட்டை போட்டு கொண்டார்.

இந்த ஓட்டைகள் முகத்தின் இருபுறமும் 36மிமீ அளவு கொண்டதாக உள்ளது.அதில் பட்டன் மற்றும் சில மாடல் அணிகலன்களை அணிந்து உள்ளார்.மேலும் உடம்பிலும் அணிபோல் எதையோ குத்தி வைத்து உள்ளார்.

மிக்லர் இந்த பாடி ஆர்ட்டுக்கு என ஒரு பெயரிட வில்லை என கூறினார். ஆனால் எனது குறிக்கோள் இந்த ஒட்டையின் அளவை 400 மிமீக்கு அதிகரிப்பதே. 3 முறை வெட்டி இந்த 36 மிமீட்டர் ஓட்டை போடப்பட்டு உள்ளது.

எனக்கு 3 மாதம் வரை சாப்பிடும் போது அதிகமான வேதனைகளை சந்தித்தேன்.ஆனால் எனது செயல்களை மக்கள் வெறுக்கிறார்கள். ஆனால் அடுத்தவர்கள் பற்றி நான் கவலைப்பட வில்லை என கூறினார்
Tags:
Privacy and cookie settings