இளைஞர்கள் பயணித்த படகை தாக்கி சேதமாக்கிய திமிங்கிலம் !

மாத்­தறை மிரிஸ்ஸ கடலில் திமிங்­கி­லங்­களை பார்­வை­யி­டு­வ­தற்­காக படகில் சென்ற இளைஞர் குழு­வொன்று வலையில் சிக்­குண்­டி­ருந்த திமிங்­கி­ல­மொன்­றினை காப்­பாற்றும் துணி­கர செயலில் ஈடு­பட்டு 


இறு­தியில் ஆபத்­துக்கு முகம் கொடுத்த சம்­பவம் நேற்­று­ முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. இளை­ஞர்கள் சிலர் படகில் கட­லுக்குள் சென்­றி­ருந்த போது இவ்­வாறு

திமிங்­கி­ல­மொன்று வலையில் சிக்­கி­யி­ருந்­த­தா­கவும் அவ்­வி­டத்­துக்கு வருகை தந்த மற்­றைய பட­குகள் ஆபத்­தி­லி­ருந்த திமிங்­கி­லத்தை கண்டும் காணா­த­வாறு சென்­றதா­கவும் தெரி­வித்த 

இந்த இளை­ஞர்கள் தங்­க­ளோடு படகில் வந்­தி­ருந்த அனை­வரும் திமிங்­கி­லத்தை காப்­பாற்­று­வ­தற்கு சம்­மதம் தெரி­விக்­கவே திமிங்­கி­லத்தை காப்­பாற்றும் நோக்கில் அனை­வரும் கடலில் பாய்ந்­துள்­ளனர்.

இந் ­நி­லையில் குறித்த இளைஞர் குழு­வினர் மேற்­கொண்­டி­ருந்த துணி­கர முயற்­சியின் விளை­வாக வலை­யி­லி­ருந்து திமிங்­கிலம் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இத் திமிங்­கி­லத்தை காப்­பாற்ற சென்ற வேளையில் அது குழப்­ப­ம­டைந்து படகின் இயந்­தி­ரத்தை சேத­ம­டைய செய்­த­தாக அவ் இளை­ஞர்கள் தெரி­வித்­தனர்.


இதனால் படகு செய­லிழந்து பயணத்தை தொடர முடியாமல் போனமையினால் வேறு படகொன்று வர வழைக்கப்பட்டு அதன் உதவியுடன் மேற்படி படகு இழுத்துச் செல்லப்பட்டது.
Tags:
Privacy and cookie settings