தடைகள் தான் வாழ்க்கையின் இலக்கு !





தடைகள் தான் வாழ்க்கையின் இலக்கு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?. வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது.
தடைகள் தான் வாழ்க்கையின் இலக்கு !
நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர் பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது. தடைகளை கண்டு அனைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம். 
அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?

தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமான தல்ல, தடைகள் தான் வாழ்க்கை, அந்த தடைகளை நாம் எதிர்நோக்க வில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்று தான் பொருள்.

நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த கால கட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று 

அதனை எதிர் நோக்கி யிருந்தோமோ, அந்த கால கட்டங்கள் மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் .

நாம் இன்பமான காலங்கள் என்று நினைத்த காலகட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் மறந்து போகும். 

வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பது நம் அணைவருக்கும் தெரியும். அந்த அனுபவங்களில் எஞ்சி இருப்பது நாம் போராடிய காலங்கள் தான்.சரி 

இந்த அனுபங்களை எப்படி பெறுவது?
நாம் தடைகள் என்று எதை நினைக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி புதையல் இருக்கின்றது என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும், ஏன் என்றால் இது தான் உறுதியான பிரபஞ்சவிதி.

தடைகள் ஒரு விசயத்தில் இருக்கின்றது என்றால் ,தடைகளுக்கு அப்பால் உள்ள வெற்றி புதயலை அடைய நாம் நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முதல் பாடம்.
சரி தகுதி என்றால் என்ன ?

தடைகளை மீண்டும் மீண்டும் எதிர் கொள்வது தான் முதல் தகுதி,நாம் தடைகளை கண்டு அஞ்சுவதோ, அதனிடம் இருந்து ஓடி விடுவதோ கூடாது.

5.தைரியமாக தடைகளை அது எப்படி இருந்தாலும், நம்மிடம் அதனை எதிர் கொள்ளும் தகுதி இல்லா விட்டாலும் கூட நாம் எதி கொள்ள கொள்ள அந்த தடைகள் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும்
தடைகள் தான் வாழ்க்கையின் இலக்கு !
அந்த ரகசிய வழிகளை நமக்கு உணர்த்தியே தீரும் .எந்த விசயத்திலும் தோல்வி யடைந்தவர்கள் தடைகள் உணர்த்தும் பாடங்களை அறியும் முன்பே அதனை விட்டு வெளியேறி விட்டவர்கள் தான்.

ஒருவர் நினைக்கிறார் எனக்கு என் வாழ்வில் எந்த தடைகளும் இல்லை என்றால், இது தவறு. 

உடனே நீங்கள் உங்களால் முடிந்த வரை நீங்களாகவே சவாலான சூழ்நிலைகள் என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள்,
அவைகளை எதிர் கொள்ளுங்கள் வாழ்க்கையை வாழுங்கள், இல்லை யென்றால் உங்களுக்கு நினைத்துப் பார்க்க கடைசி காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்தி லும் வாழ்க்கை என்று ஒன்று இருக்காது.
Tags: