உங்கள் கை வரிகள் என்ன கூறுகிறது?

கை ரேகை ஜோதிடம் பார்க்கும் போது பெரும்பாலும் ஜோதிடர்கள் உள்ளங்கைக ளில் அமைந்தி ருக்கும் வரிகளை கண்டு 


தான் ஒருவரது வாழ்க்கை யின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்க் காலத்தை பற்றி குறிப்பிட்டு கூறுவார்கள்.

மற்றும் இந்த கை ரேகை ஜோதிடத்தின் மூலம், ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறப்படுகிறது.

ஆனால், உள்ளங்கை ரேகைகள் மட்டுமின்றி கை மணிக்கட்டு பகுதியில் அமைந்திருக்கும் வரிகளை வைத்தும் கூட ஒருவரின் வாழ்க்கை, ஆயுள், ஆரோக்கியம், 

தொழில் போன்றவை பற்றி கூற முடியும் என கூறுகிறார்கள். அது எப்படி மற்றும்

உங்கள் மணிக்கட்டு வரிகள் உங்கள் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என இனிக் காணலாம்…

ரேகை / வரிகள் பொதுவாக கைகளில் குறுக்கும், நெடுக்குமாக அமைந்திருக்கும் கை ரேகைகள் வைத்து தான் ஜோதிடம் கூறப்படும்.

ஆனால், நமது கை மணிக்கட்டில் இருக்கும் வரிகளை வைத்தும் கூட ஆரோக்கியம், உறவுகள் மற்றும் வாழ்க்கையை பற்றி கூறலாம்.

உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் மணிக்கட்டிலும் கூட ஓரிரு வரிகள் ரேகை போன்று அமைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.

இதை ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று கூறுகிறார்கள்.

மணிக்கட்டு இரகசியங்கள் இதை மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்றும் கூறுகிறார்கள்.


இந்த மணிக்கட்டு வரிகளை வைத்து நமது ஆயுளை கூட கூறமுடியும் என்கிறார்கள். –

எண்ணிக்கை உங்கள் கை மணிக்கட்டு ரேகை வரிகள் எவ்வளவு இருக்கின்றன என முதலில் எண்ணுங்கள்.

ஒரே ஒரு வரி தான் இருக்கிறது எனில், அவரது ஆயுள் 25- 35 எனவும், 

இரண்டு வரிகள் இருக்கிறது எனில் 45 – 57 எனவும், மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் 85 வயது ஆயுள் எனவும் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.

பொதுவாக அனைவருக்கும் இரண்டு முதல் மூன்று வரிகளும், அரிதாக சிலருக்கு ஒன்று அல்லது நான்கு வரிகளும் இருக்கும்.

முதல் வரி முதல் வரி மிக தெளிவாகவும் பிரிவு இல்லாமல் இருந்தால், நீங்கள் நல்ல ஆரோக்கியத் துடனும், உடற் திறனுடனும் இருப்பீர்கள்.

ஒருவேளை முதல் வரி பிரிவுடன் இருந்தால் அந்த நபர் பொறுப்பற்றும், சகிப்புத் தன்மையுடனும் இருப்பார் என்று கூறப்படு கிறது.

முதல் வரி முதல் வரி மிக தெளிவாகவும் பிரிவு இல்லாமல் இருந்தால், நீங்கள் நல்ல ஆரோக்கியத் துடனும், உடற் திறனுடனும் இருப்பீர்கள்.

ஒருவேளை முதல் வரி பிரிவுடன் இருந்தால் அந்த நபர் பொறுப்பற்றும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பார் என்று கூறப்படுகிறது. –

பெண்களுக்கு பெண்களுக்கு மணிக்கட்டு வரிகளில் நெளிவு சுளிவுகளுடன் இருந்தால் அவர்களுக்கு மகளிர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

மற்றும் கருத்தரிக்கும் போதும் அவர்கள் சற்று சிரமப் படுவார்கள். மாதவிடாய் நாட்கள் தள்ளி போவது போன்ற கோளாறுகளும் நிகழலாம்.

ஆண்களுக்கு ஆண்களுக்கு முதல் மணிக்கட்டு வரி நெளிவி சுளிவுடன் இருந்தால்,


அவருக்கு சிறுநீர், புரோஸ்டேட் மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் ஏற்படலாம்.

இரண்டாவது மணிக்கட்டு வரி இரண்டாவது மணிக்கட்டு வரி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறித்தது.

இந்த வரி தெளிவாக, எந்த பிரிவுகளும் இன்றி இருந்தால் உங்களுக்கு நிறைய நல்லவை நடக்கும் என்றும்,

பிரிவுகள் இருக்கும் சமயத்தில் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படு கிறது.
Tags:
Privacy and cookie settings