வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்து விடுவோமோ என்று தற்கொலை !

கோவையில் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர் ஒருவர் முடிவு வெளியாகும் முன்பே தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, 

ஜஸ்வந்த் ஆகியோர் 1,200-க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். கோவை மாவட்டம் பெரிநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திகணேஷ் (17). 

காரமடையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்த அவர் ப்ளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் அவருக்கு தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுகள் வரும் முன்பு அவர் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags: