பாங்கு சொன்னால் எழுந்து உட்கார வேண்டுமா?

நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொன்னால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லி ம்களிடம் பரவலாக உள்ளது 
பாங்கு சொன்னால் எழுந்து உட்கார வேண்டுமா?
இந்த நம்பிக்கை க்கு மார்க்கத் தில் எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

626 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

• ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக 

அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். 

பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப் பான) இகாமத் சொல் (தொழுகை நடத்து) வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக் கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். புஹாரி 626

இந்த ஹதீஸின் தமிழாக் கத்தில் தெளிவு இல்லாமல் உள்ளது. சரியாக மொழி பெயர்த்தால் தால் இதை விளங்கிக் கொள்ள முடியும். 

ஃபஜ்ரு தொழுகை யின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்த வுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவார்கள். 
ஃபஜ்ரு தொழுகை க்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழு வார்கள் என்பது தான் மேற்கணட் வாசக த்தின் சரியான பொருளாகும்.

பாங்கு சொல்லி முடியும் வரை படுத்துக் கிடந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லி முடித்தவுடன் எழுந்துள்ளதால் படுத்துக் கிடப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அதே நேரம் பாங்கு சொல்லும் போது அதே போல் நாமும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற கட்டளை உள்ளது.

611 அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொ ல்லுங்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 611
அல்லாஹ் வைத் துதிக்கும் சொற்களை திக்ருகளை படுத்துக் கொண்டு எப்படி சொல்ல முடியும் என்ற சிந்தனையின் அடிப்படை யிலேயே இந்தக் கருத்து விதைக்கப் படுகின்றது. 

ஆனால் இறைவனை படுத்துக் கொண்டும் திக்ர் செய்யலாம் என்று திருக்குர் ஆனும் நபி வழியும் கூறுகின்றன. 

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல் லாஹ்வை நினைப் பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப் பட்டது குறித்துச் சிந்திப் பார்கள். எங்கள் இறைவா!

இதை நீ வீணாகப் படைக்க வில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனை யிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்) திருக்குர் ஆன் 3:191

நீங்கள் தொழுகை யை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! 

நீங்கள் அச்ச மற்ற நிலையை அடைந்தால் தொழுகை யை (முழுமை யாக) நிலை நாட்டுங்கள்!127 நம்பிக்கை கொண்டோர் 
மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக வுள்ளது. திருக்குர் ஆன் 4:103.

297 (நபி ஸல அவர்களின் துணை வியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடா யுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓது வார்கள். புஹாரி 297
Tags:
Privacy and cookie settings