கருப்பு நிற தண்ணீர் டேங்கால் ஏற்படும்.. கட்டாயம் படிக்கவும் !

வீட்டில் நாம் வைத்திருக்கும் கருப்பு நிற தண்ணீர் டேங்கால் ஏற்படும் ஆபத்துகள். 


அரபு நாடுகளில் நம் நாட்டைவிட வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கும். நான் கடல் நீரை குடிநீராக்கும் கம்பெனி ஒன்றில் பணி புரிகிறேன்.

இங்கே வெயிலின் தாக்கத்தி லிருந்து குடிநீரை பாதுகாக்க உபயோகப் படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன.

நாம் நம் வீடுகளில் அதிகமதிகம் கருப்புநிற தண்ணீர் தொட்டி களை பயன்படுத்து கிறோம். 

அப்படி இருக்க இங்கு ஏன் வெள்ளை நிறத்தொட்டிகளை பயன்படுத்து கிறோம் என்று விசாரித்த போது நான் பல நல்ல விசயங்களை புரிந்து கொண்டேன்.

கருப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக் கூடிய தன்மை உள்ளது. 

அதனால் தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டு மென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

கருப்புநிற தொட்டிகள் ஒளியை இழுத்து தண்ணீரை சூடாக்கி வெப்பத்தால் ஏற்படும் அனைத்து கெடுதிகளையும் நமக்கு தருகிறது. 

வெள்ளை நிற தொட்டிகள் அதற்கு எதிர் மறையாக சூரியக் கதிர்களை பிரதிபலித்து தண்ணீர் சூடாகாமல் இருக்க உதவுகிறது.


மேலும் புரவூதா கதிர்களினால் தண்ணீர் கெட்டு விடாமலும் பாதுகாக்கிறது.

வெயிலில் சூடான நீரில் குளிப்பதால் தோல் நோய்கள் வருகின்றன. அலர்ஜி ஏற்படுகிறது.

வெண் குஷ்டம் போன்ற கொடிய நோய்களும் கூட வர வாய்ப்புள்ளது.

வெயிலில் சூடான குடிநீரை குடிப்பதால் கேன்சர் வருமென்று ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன. 

எனவே இதன் உண்மை உணர்ந்து புதிய தண்ணீர் தொட்டிகளை வாங்க விரும்பு பவர்கள்

சிறிது பணம் அதிகம் செலவானாலும் வெள்ளை நிறத்தொட்டிகளை வாங்கி பயன் படுத்துங்கள்.

கடைக்காரர் கருப்பு நிறத்தொட்டியை விலை குறைவாக தந்தாலும் இனிமேல் வாங்காதீர்கள் ஏனென்றால்..???


உங்களுக்கு விலை குறைவாக கிடைத்தாலும் கருப்பு நிற தொட்டி விற்றால்தால் அவருக்கு லாபம் அதிகம். இப்போது புரிகிறதா…!

ஏற்கனவே கருப்பு நிறத்திலான தண்ணீர் தொட்டிகள் வைத்திருப் பவர்கள் வீட்டிற்கு வண்ணம் பூசும் போது மீதமான

வெள்ளை பெயிண்ட் இருந்தால் அதை தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியில் அடித்து நிறத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
Tags:
Privacy and cookie settings