நாட்டை விட்டே கிளம்பும் குஷ்பு !

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. பள்ளி விடுமுறையில் இருக்கும் மகள்களுடன் குஷ்பு இன்று வெளிநாட்டிற்கு சுற்றுலா கிளம்புகிறார். 
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக ஊர், 

ஊராக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு.

சிலருக்கு வெற்றி கிடைக்கும், சிலருக்கு தோல்வி...அது தான் வாழ்க்கைச் சக்கரம். அதிமுகவுக்கு வாழ்த்துக்கள், மமதாவுக்கும் வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார். இதனால் பள்ளி விடுமுறையில் இருக்கும் அவரின் 2 மகள்களால் தாயுடன் நேரம் செலவிட முடியவில்லை. அந்த குறையை தற்போது போக்கியுள்ளார் குஷ்பு.

நான் என் குழந்தைகளுடன் இன்று வெளிநாட்டிற்கு கிளம்புகிறேன். விடுமுறையில் அவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவிடப் போகிறேன் என்று குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நான் பலர் உயர பறந்ததை பார்த்துள்ளேன். உயரத்தில் இருந்து விழுவதில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். குட் லக். உங்களுக்கு பதில் சொல்வதை விட என் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது எனக்கு முக்கியம் என்று குஷ்பு ட்விட்டரில் கூறியுள்ளார்.
Tags: