ஹரப்பா நாகரீகத்திற்கு இணையாக கழிவுநீர் குழாய் !

ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான ஒரு நகர நாகரீகம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந் துள்ளது என்பதற் கான ஆதாரம் தொல்லியல் ஆய்வில் கிடை த்துள்ளது.


தமிழகத்தில் முன் எப்போதும் கிடைத்திராத அரிய தொல்லியல் ஆதாரங்கள் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தை புதூரில் தான் இந்த பழங்கால பொருட்கள் கண்டெ டுக்கப் பட்டுள்ளன.

நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக் கப்பட்ட

கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. 

ஹரப்பாவில் தான் இது போன்ற குழாய் களுடன் கூடிய நகர நாகரீகம் இருந்தது தெரிய வந்த நிலையில்

இப்போது தமிழகத்திலும் அதே போன்ற நாகரீகம் இருப்பது திருப்பு முனையை தந்துள்ளது. 

இப்போது பிளாஸ்டிக் பைப் மூலம் நாம் நீரை வெளியேற்று வதை அக்காலத்தில் சுடுமண் குழாய் மூலம் மேற்கொண் டுள்ளனர்.

ஹரப்பா மற்றும் தமிழகம் நடுவேயான மக்களிடையே ஒற்றுமை இருந்திருக்க வேண்டும் என்பதையும் இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

பெங்களூ ருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில்

இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. 

தொல்பொருள் துறை கண்காணிப் பாளர் கே.அமர்நாத் ராமகி ருஷ்ணா தலைமையில் உதவி


தொல்லிய லாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டு ள்ளனர். 

முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததை விட இரண்டாம்கட்ட அகழ்வாய்வில் 10க்கும் மேற்பட்ட சங்க கால கட்டிடங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

அக்கால மக்கள் பயன் படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் (தற்போது வணிக நிறுவ னங்கள் பயன் படுத்தும் ரப்பர் ஸ்டாம்பு போன்றது), 

எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணி கலன்கள்,

18 தமிழ் பிராமி எழுத்துக ளையுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 3,000க்கும் மேற் பட்ட தொல்பொ ருட்கள் கிடைத் துள்ளன. 

அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டினம், உறையூர் போன்ற அகழ் வாய்வில் கிடைத்ததை விட

கீழடியில் அதிக எண்ணிக் கையில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் கண்ட றியப்பட்டு வருகின்றன.

சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ் வாய்வு மாற்றியமை த்துள்ளது.


கீழடியில் கண்டறியப் பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்த தற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத் துள்ளன. 

தமிழகத்தில் இது வரை நடை பெற்ற அகழ்வாராய் ச்சியில் இப் போது தான் முதல் முறையாக சுடு மண் முத்திரை கிடைத் துள்ளது.

எனவே இந்த ஆய்வு மிகுந்த முக்கிய த்துவம் பெறுகிறது.
Tags:
Privacy and cookie settings