ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்த பணிப்பெண் !

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவரது முகம் சுழிக்க வைக்கும் செயல் வீட்டு உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்த பணிப்பெண் !
குவைத் நாட்டில் குடியிருந்து வரும் ஒரு குடும்பம் அவர்களது வீட்டில் இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியிருந்தது.

இதில் ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்த வீட்டின் உரிமையாளருக்கு அந்த பணிப்பெண்ணின் நடவடிக்கையை கண்காணிக்கும் பொருட்டு சமையலறையில் குட்டி கமெரா ஒன்றை பொருத்தி வைத்துள்ளார்.

சம்பவத்தின் போது தமது எஜமானருக்கு தருவதாக தயார் செய்த பழச்சாறில் குறிப்பிட்ட அந்த பணிப்பெண் தமது சிறுநீரை கலந்தது பதிவாகியுள்ளது.

பணிப்பெண்ணின் இந்த அருவறுக்கத்தக்க செயல் அனைவரையும் முகம்சுழிக்கும் படி செய்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலதிக விவரங்களை அந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த பணிப்பெண் குறித்த விவரங்களையும் அந்த குடும்பத்தினர் வெளிவிட மறுத்துள்ளனர்.

இருப்பினும், சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இந்த சம்பவத்தை அவர்கள் பகிர்ந்துள்ளது மட்டுமின்றி, எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings