ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள் !

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங் களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல் தான்.
ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியம்


முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய் விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கி யத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கி யத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கி றார்கள். 

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக் கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. 

மகிழ்ச்சி பெருகி எதிர் காலத்தைப் பற்றிய வளமான எண்ணங் களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படை யிலேயே நடத்தப் படுகிறது. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. 

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலி களையும் பிடித்துக் கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

இது ஒரு நல்ல பயிற்சி. கம்ப்யூட்டரில் மணி கணக்கில் உட்கார்ந்து முதுகுத் தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் 

முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது. தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. 
ஊஞ்சல் சடங்கு


மரம் செடிகளி லிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.

தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.  ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்ட வுடன் அரை மணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். 

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றி யலைந்து விட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, 

இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதிய வைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப் பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். 

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திரு ப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப் படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. 

சுப காரியங் களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப் பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

ஊஞ்சல்கள் பலவகை: 
ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் நன்மை


சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம். நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும். 

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது. மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறை களுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்

அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது.

காற்றோட்ட மான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது. கூடுமான வரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. 

ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும். உடலைக் கொண்டு ஆட விருப்பம் இல்லாதவர்கள் ஊஞ்சலாட்டம் ஆடியாவது மனதை தளர்வு நிலைக்கு கொண்டு வரலாமே.
Tags:
Privacy and cookie settings