வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு !

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிக ளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு !
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 சட்டப் பேரவை தொகுதி களுக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதி நடந்தது. 

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப் பட்டுள்ள 68 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வீடியோ கண்காணிப்பு டன் துணை ராணுவம், ஆயுத போலீஸார், ஆயுதமில்லாத போலீஸார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சோழிங்க நல்லூர் தொகுதியில் அதிக வாக்குச் சாவடிகள் என்பதால் 24 மேஜைகள் அமைக் கப்படுகின்றன. 

இதே போல, வாக்குச் சாவடிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப 68 மையங்களிலும் 3,236 மேஜைகள் அமைக்கப் படுகின்றன. மழையால் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்படாது.
Tags:
Privacy and cookie settings