30 லட்சம் கொடுங்க... நடிகையின் கோரிக்கை !

வளரும் தீப நடிகையின் கோரிக்கையால் காமெடியனிலிருந்து ஹீரோவாக மாறிய சாண்டல்வுட் நடிகர் ஆடிப் போயிருக்கிறாராம். தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகிய சாண்டல்வுட் நடிகர் 
30 லட்சம் கொடுங்க... நடிகையின் கோரிக்கை !
மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவை விட இவரின் காட்சிகளையே தமிழர்கள் அதிகம் பார்க்கும்படி நேரிட்டது.

எத்தனை நாளைக்குத் தான் ஊரான் காதலை ஊட்டி வளர்ப்பது நாமும் ஊட்டி போய் டூயட் பாடினால் என்ன என்ற சிந்தனை திடீரென்று இவருக்கு வந்ததில் 

ஒரு சுபயோக சுப தினத்தில் இனிமேல் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அறிக்கை விட்டு சக ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்தார். 

மேலும் இவர் ஹீரோவாக நடித்த படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் ஓட தற்போது முழுநேர நடிகராகவே மாறி விட்டார்.
இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகிய போது பலரும் தயக்கம் காண்பித்தனராம்.

வேறு வழியில்லாமல் வளர்ந்து வரும் தீப நடிகையை அணுகிய போது நடிக்க சம்மதம் தான் ஆனால் 30 லட்சம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம். 

ஆடிப் போன சாண்டல்வுட் தற்போது சம்பளத்தை குறைப்பது தொடர்பாக அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings