உடலில் தோன்றும் கட்டிகளை குணமாக்கும் சப்பாத்திக்கள்ளி !

நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப் பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்பு களுக்கு தேவையான ஊட்டச் சத்தை தருவதுட ன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
சப்பாத்திக்கள்ளி


டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன.

உணவுப் பாதை, மூச்சுப் பாதை, தோல் போன்ற வற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண் கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டை யிடும் போது அழிந்து விடுகின்றன 

அல்லது இரத்த அணுக்களால் தூக்கியே யறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப் படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டு பண்ணுகின்றன. 

அது மட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண் கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்ப த்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கை யாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப் படுகிறது. 

இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப் படுகின்றன.

மேலும் நாம் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக் கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடை கின்றன.


இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்கு கின்றன.

இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகுகின்றன.

சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப் பாடில்லாத வர்கள், உடல் உழைப்பில்லா தவர்கள், அடிக்கடி தொற்று நோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப் பிடிப்பவர் களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. 

லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும். இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களா வதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், 

நெறிகட்டுதல் போன்ற பல தொல்லை களையும் ஏற்படுத்தும். இல்லா விட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்கு வதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன.

கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற் பார்வையில் புண்களை ஆற்ற வேண்டும். 
கட்டியில் தோன்றும் சீழ்


இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்து விடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விட வேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட ப

குதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகை தான் சப்பாத்திக் கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக் கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. 

இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச் சத்துக்களும் காணப் படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மை யுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக் கள்ளியின் இலைத் தண்டை பிளந்து, வெளிப் புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, 

கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையி லுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குண முண்டாகும்.
Tags: