மே மாதம் 9 முதல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் !

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 27ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் வரும் ஜூன் 15-ல் வெளியிடப்படும். ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டைப் போலவே 2655 இடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1010 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 

இவற்றில் 415 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கின் கீழ் வரும். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் நிரப்பப்படும். இவற்றில் 15 இடங்கள் அகில் இந்தியா கோட்டாவுக்காக ஒதுக்கப்படும்.
Tags: