ஏன் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது?

இந்தியாவில் சரியான காரணம் ஏதும் தெரியாமல் பின் பற்றப்படும் பழக்க வழக்கங்கள் ஏராளம். ஆனால் அப்படி பின் பற்றப்படும் ஏராளமான பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் காரணம் இருக்கும்.
ஏன் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது?
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா? அப்படிப் பட்ட பழக்க வழக்கங்களில் ஒன்று தான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பது. 

நிச்சயம் ஒவ்வொருவரது வீட்டில் இருக்கும் பெரியோர்களும் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !

அது ஏன் என்று தெரியுமா? நீங்க தூங்குற 'லட்சணத் திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக் கலாமாம்...! 

இங்கு ஏன் ஒருவர் படுக்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காரணத்துடன் அப்பழக் கத்தைப் பின் பற்றுங்கள். 

காந்தமானது இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்களை ஈர்க்கும் தன்மை கொண்டது என அனைவரும் அறிவோம். அதேப் போல் காந்தத்திற்கு இரு துருவங்கள் உள்ளன.

அவை வட துருவம் மற்றும் தென் துருவம். காந்தங் களின் இரண்டு ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும். அதுவே எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை. 
சூரியனின் அதிகப் படியான வெப்பத்தினால் பூமியின் கிழக்குப் பகுதி சூடாகவும், மேற்கு பகுதி குளிர்ச்சி யுடனும் உள்ளதால்,

வலிமையான மற்றும் வெப்பமான மின்னோட்டம் கிழக்குத் திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாக்கப் படுகிறது. 
இவ்வாறு உருவான மின்னோட்ட த்தின் திசைக்கு வலது பக்கத்தில் உள்ள வடக்கு திசை நேர் மின்னோட்ட த்தையும், இடது பக்கத்தில் உள்ள தெற்கு திசை எதிர் மின்னோட்ட த்தையும் பெறுகிறது. 

இதன் காரணமாக பூமி ஓர் காந்தமானது. சூரிய வெப்பத்தி னால் காந்தமான பூமி தன்னைத் தானே சுற்றுவதாலும் காந்த சக்தியைப் பெறுகிறது. 

மனிதனின் உடலில் உள்ள இரத்த மானது சிவப்பணுக்கள், வெள்ளை யணுக்களைத் தன்னுள் கொண்டது.

இதில் சிவப்பணுக் களின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவைப் படுவதால், மனித உடலில் இரும்புச் சத்துக்கள் உள்ளன. இந்த இரும்புச் சத்துக்கள் காரண மாகத் தான் மனிதன் பூமியால் ஈர்க்கப் படுகின்றான்.

பூமியின் வட துருவத்தில் நேர் மின்னோட்டமும், தென் துருவத்தில் எதிர் மின்னோட்டமும் உள்ளது என்று பார்த்தோம். 

அதேப் போல் எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்றும் பார்த்தோம். அந்த வகையில் மனிதனின் தலை நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. 

மனிதன் தூங்கும் போது தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்குப் பக்கம் கால் நீட்டித் தூங்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்ட த்துடன் இருக்கும்.
ஏன் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது?
அதாவது மின்னோட்ட மானது சீரான நிலையில் இருக்கும். இதனால் உடல் ஆரோக்கி யமாக இருக்கும். 

ஆனால் வடக்குப் பக்கம் தலை வைத்து, தெற்கு பக்கம் கால் நீட்டிப் படுப்பதால், மின்னோட்டங் களுக்கிடையே இடையூறு ஏற்பட்டு, 
அதனால் உடலின் ஆற்றல் சீர்குலைந்து, இத்திசையில் படுக்கும் போதெல்லாம் உடல் நலத்தில் பிரச்சனை களை சந்திக்க நேரிகிறது. 

இதன் காரணமாகத் தான் வடக்குப் பக்கம் தலை வைத்து படுக்காதே என்று நம் முன்னோர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings