மகன் பொதுத் தேர்வு எழுத தந்தை இறந்ததை மறைத்த தாய் !

தாயார் ஒருவர் தனது மகன் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக தனது கணவர் இறந்த தகவலை மறைத் துள்ளார்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (47), மனைவி மகேஷ்வரி ஆகியோ குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் குடியேறி யுள்ளனர்.download (7)

முத்துகிருஷ்ணன் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த நிலையில், மகேஷ்வரி காந்திகிராம சுகாதார அறக்கட்ட ளையில் பயிற்சி யாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் விஸ்வா மணிகரன் 10ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று நடந்த ஆங்கில தேர்வுக்கு மகனை தயார் செய்ய நேற்று முன்தினம் மகேஷ்வரி விடுப்பு எடுத் துள்ளார். அன்றைய தினம் காலை சாலை விபத்தில் சிக்கிய முத்து கிருஷ்ணன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அவருடைய மனைவி மகேஷ்வரி தன்னுடைய மகனிடம் நடந்த வற்றை சொல்லாமல் தேர்வுக்கு படிக்க சொல்லிவிட்டு மருத்துவ மனையில் இருந்துள்ளார்.

தேர்வுக்கு நன்றாக படித்த மாணவன், தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்டு வந்து தந்தையின் நலம் குறித்து விசாரித்த போது தான் தந்தை இறந்த விடயத்தை மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

மகன் தேர்வு எழுத வேண்டும் என கணவர் விபத்தில் இறந்ததை மறைத்த பெண்ணின் செயல் பலரின் நெஞ்சையும் உருக்கியுள்ளது.
Tags:
Privacy and cookie settings