பிரசவ அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !

சீனாவில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அங்குள்ள மருத்துவர் கொடூரமாக தாக்கியுள்ளார். 
பிரசவ அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !
இந்த அதிர்ச்சி காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள மொங்கோலியா புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்குள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த பெண் ஒருவர், மருத்துவ கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மருத்துவமனை பெண் மருத்துவர், அறுவை சிகிச்சை அறையிலேயே அந்த பெண்மணியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மருத்துவர் கண்டும் காணாதது போன்று இருந்துள்ளார்.

அறுவை சிகிச்சை அறையிலேயே நோயாளியிடம் அதிக பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது
Tags:
Privacy and cookie settings