வேலை வேண்டி பிளிப் கார்ட் தளத்தில் தன்னை விற்க முயன்ற மாணவர் !

வேலைக்கு விண்ணப்பம் செய்ய தன்னைத்தானே பிளிப் கார்ட் வணிக இணையதளத்தில் விற்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 
காரக்பூர் ஐஐடி யை சேர்ந்த மாணவர் ஆகாஷ் நீரஜ் மிட்டல் வேலைக்கு விண்ணப்பம் தயார் செய்ய சிரமப்பட்டு இவ்வாறு செய்துள்ளார். 

ஆகாஷ் மற்றும் அவருடைய சீனியர் மாணவருடன் சேர்ந்து இந்த வித்தியாமான விண்ணப்பத்தை பிளிப் கார்ட் நிறுவனத்தில் சேர உருவாக்கியுள்ளனர். 

ஆன்லைன் இ-காமர்ஸ் துறையில் முன்னணியில் உள்ள பிளிப் கார்ட்டில் உண்மையில் தன்னை விற்க முயற்சி செய்துள்ளார். 

இது குறித்து ஆகாஷ் கூறுகையில் படித்து விட்டு பலர் வேலை தேடும் சூழலில் வித்தியாசமான முயற்சி செய்வதன் மூலம் தான் வேலையை பெறமுடியும் என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings