ம.ம.க பொது செயலாளர் அன்சாரி புதிய கட்சி தொடங்கினார் !

மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு பிரிவாக செயல்பட்ட தமீமுன் அன்சாரி புதிய கட்சியை தொடங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனிதநேய மக்கள் கட்சியின்
ம.ம.க பொது செயலாளர் அன்சாரி புதிய கட்சி தொடங்கினார் !
சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஜவாருல்லா அறிவித்தார். 

இதனால், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் குழு (போட்டி கூட்டம்) தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. அப்போது பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

பின்பு தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இங்கே நடைபெற்ற பொதுக்குழு தான் மனிதநேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு ஆகும். 

மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் 1,500 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் சட்டிப்படி நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொடி, சின்னங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றார். 

இதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சி பிளவுபட்டது. 

இந்த நிலையில், கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை அன்சாரி தொடங்கினார். இதற்கான அறிவிப்பைமுறைப்படி அறிவித்தார்.
Tags:
Privacy and cookie settings