விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரை விற்பனை நிறுத்தம் !

உங்களுக்கு தலைவலியா... ஜலதோஷமா? ஆமாம்ப்பா... ஆமாம்...! அப்படி யென்றால் விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையை எடுத்தக்கோங்க...!" என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம்,
விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரை விற்பனை நிறுத்தம் !
20 வருடங்களுக்கு முன்பு நுழைந்தது விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து நிறுவனம்.

மாத்திரை என்றால் மெடிக்கல்ஸை நோக்கி ஓடுவதை மாற்றி இந்தியாவின் கடைகோடி கிராமத்தின் மளிகை கடைகள், பெட்டிக் கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும் படி செய்தது இந்த நிறுவனம். 

எந்த நோய் என்றாலும் முதல் அறிகுறியாக வரும், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிக்கு இந்த மாத்திரையை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. 

இதைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள், அதிக டோசேஜ் காரணமாக புழக்கத்தில் இருந்து வரும் சில மருந்துகளை தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து பக்க விளை வுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப் பட்ட அளவை விட அதிக டோசேஜ் கொண்ட 344 வகையான மருந்து உற்பத்தியை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. 

இது தொடர்பாக அந்தந்த மருந்து தயாரிப்பு நிறுவனங் களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்தது.

இந்நிலையில் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரை களை தயாரிக்கும், பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்ஷன் - 500 எக்ஸ்ட்ரா என்ற 

மருந்து தயாரிப்பு நிறுவனம், தங்களுடைய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்தி விட்டதாக அறிவித் துள்ளது. 
இதே போன்று கோரக்ஸ் என்ற இருமல் டானிக்கை தயாரிக்கும் நிறுவனமும் தயாரிப்பை நிறுத்தி யுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings