நெஞ்சு வலியா? வெங்காயம் !

காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத் தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங் காயம்.


ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப் படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பே ராற்றல் வாய் ந்த காய் கறியாக வெங்காயம் சிறந்து விளங் குகிறது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு வகைக ளுள் முதலிடத்தில் இருக் கிறது. உயர்தரமான புரத ம், அதிக அளவில் கால்சியம், ரிபோபி ளவின் போன்றவை இதில் அடங்கியுள்ளன. 

சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளா மல் வைததிருந்தும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைக் கடியுங்கள் 

வெங்காயத்தில் உள்ள வாசனை கந்தக பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாச னை மறைய நீண்டநேரம் ஆவதற்கு இது தான் காரணம் .

இப்படிக் கடித்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள புண், கண்வலி, முதலியன குண மாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரி போபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகி றது.

சிறிய வெங்காயம் என்றாலும் சரி, பெரிய வெங்காயம் என் றாலும் சரி இரண்டிலும் ஒரே மாதிரியான மருத்துவக் குண ங்கள்தான் உள்ளன.

தரம் மாறலாமா? 

வெங்காயத் தை வதக்கியோ வேகவைத் தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ, குணப்படுத்தும் மருத்துவக் குணங்களோ குறைந்து விடாமல் அப்படி யே கிடைக்கும். 

உறைப்பு அதிக முள்ள வெங்காயத்தின் சுவையும் நறுமணமுங் கூட அழிந்து விடாமல் அப்படியே கிடைக்கும்.



உடலுக்குக் கிளர்ச்சியூட்டும், சிறு நீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச் சிவக்கவைக்கிற மேற்பூச்சு மருந்தாகப் பயன் படும். கபத்தை வெளிக் கொண்டு வரப் பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங் காயம் சிறந்த உணவு மருந்தா க த் திகழ்கிறது.

இரத்தம் விருத்தியாகத் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும். நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.

காய்ச்சல், சிறுநீர்க் கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம் உடலுக்குக் கிளர்ச் சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறா கச் சாப்பிடுகிறவ ர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.

உடல் நலத்தோடிருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காய த்தை மட்டும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைக்கு என பிரித்து வைத்துக்கொண்டு, தங்கள் உணவுடன் சேர்த்து சாப் பிடலாம்.

குளிர்காய்ச்சல் குணமாக 

வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

நெஞ்சு வலியா? 

வெங்காயம் போதும்! இதயப் பையின் சுவர் தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாள ங்களில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கு ம். 


அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத் துக்குத் தடையின்றி நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும், நெஞ்சு வலியும் குணமாகும். 

இதனால் தான் இயற்கை மருத்துவர்கள் நெஞ்சு வலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலா ஸ்டிரல் குறையவும் இதயம் சீராக துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப் பிடவும்.

புகை பிடிப்பவர்கள் குணம் பெற… 

சிகரெட் பிடிப்பவர்கள் நுரையீரல், புகையினால் பாதிக் கப்படுகிறது. இவர்கள் ஒருவே ளைக்கு அரை அவுன்ஸ் வெங் காயச்சாறு வீதம் தினமும் நான் கு வேளை அருந்த வேண்டும். இதனால் நுரையீரல் பலம் பெறும். 

இதே முறையில் வெங்காயச் சாற்றை அருந் தினால் இருமல், கபம், இரத்த வாந்தி, நீண்ட நாள்களாக இருந்துவரும் ஜல தோஷம்,சளி முதலியவையும் பூரணமாய் குணமாகும்.

குளிர்கால ஜலதோஷமா? 

ஜலதோஷம், குளிர்காலத்தில் ஏற்ப டும் ஜலதோஷம், இருமல், மார் புச்சளி, சளிக்காய்ச்சல் முதலிய வை உடனே குணமாக சமஅளவு வெங்காயச் சாறு, தேன் முதலி யவை கலந்த மிக்ஸரை தயாரி க்கவும். 


இந்த மிக்ஸியில் தினமும் நான்கு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். இந்த மிக்ஸரால் மூச்சுச் குழல் தொடர்பான அனைத்து நோய்களும் எந்த விதமான கெடுதலும் இன்றி உடனே குணமாகும்.

100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் 82 %ம், புரதம் 1.2%ம், கார்போஹைடி ரேட் 11.1%ம், மீதியில் கொழுப்பு தாது உப்புகள் நார்ச்சத்து முதலியவையும் உள்ளன. 

47 மில்லி கிராம் கால்சியமும், 50 மில் லி கிராம் பாஸ்பரஸும், 0.7 மில்லி கிரா ம் இரும்பு சத்தும், வைட்டமி ன் ‘பி’, வைட்டமின் ‘சி’ முதலியன சிறிதளவும் உண்டு. கிடைக்கும் கலோரி 51.

வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து மிக எளிதாய் உடலில் கல ந்துவிடும். இதனால் இரத்த சோ கை நோயாளிகள் விரைவில் தேறிவிடுவார்கள்.

தாது பலம் பெறுங்கள் 

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய முதல் பொருளாய் வெள்ளைப் பூண்டு இருக்கிறது. இரண்டாவதாய் இருப்பது வெங்காயம்,

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்கள் உரிக் கப்பட்ட வெள்ளை நிற வெங் காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, வெண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும். 

இந்தக் கலவையில் ஒரு தேக்க ரண்டி எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும்.


காதில் வலி இருந்தால் சுட வைக்கப்பட்ட வெங்காயச் சாற் றில் ஒரு துணியை நனைத்து அத்து ணியைப் பிழிந்து இரண்டு மூன்று துளிகளைக் காதில் விடவேண்டும்.

பற்களில் பாக்டீரியாக்கள் தங்க விடாமல் இருக்கத் தினமும் ஒரு வெங்காயத் தை பச்சயைாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். இப்படிமென்று தின்றால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் பற்களும், ஈறுகளும் பாதிக்கப்படுவதும் முன்கூட்டியே தடுக்கப்படும்.

பல்வலி உள்ள இடத்தில் ஒரு துண்டு வெங்காயத்தை வைத்துக்கொ ண்டால் பல்வலி குறையும். பல் ஈறுகளிலும் குறையும். பல் சம்பந் தமான அனைத்து வெங்காய வைத் தியமும் ரஷ்யாவில் பிரபலமான வைத்திய முறைகளாகும்.

வெங்காயத்தின் தாயகம்! 

வெங்காயத்தின் தாவர விஞ்ஞானப் பெயர், அலியம் சிபா (Allium cepa) என்பதாகும்.

ஈரான் – பாகிஸ்தான் பகுதியில் தோன்றிய காய்கறி இது. மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்காயம் பண்டைய காலத்திலேயே மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலு ம் பயிர் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமான உணவு,


வெங்காயம். ஒரு வகை வெங்காய த்தைக் கடவுளாகவே இவர்கள் வணங்கி வந்தார்கள். உறவின ர்களைப் பார்க்கப் போகும் போ தும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வெங்காயத்தைப் பரிசுப் பொரு ளாகக் கொடுத்து மகிழந்தனர். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகளிலும் வெங் காயம் வைத்தே புதைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்திருக் கிறார்கள். யூதர்களுக்கு மிகவும் பிடித்தமானது வெங்காயம். 

அதனால் சூயஸ் வளைகுடாவில் ஆனியன் என்று பெயரிலே ஒரு நகரை கி.மு.430இல் யூதர் கள் நிறுவினார்கள். இந்த நக ரம் 340 ஆண்டுகள் வரை இரு ந்தது. இன்று உலகம் முழுவதும் வெங்காயம் பயிர் செய்யப் படுகிறது.

தாராள மாகவும் கிடைக்கும் வெங்காயம் மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகவும் இருப்பது மனிதனுக்கு இயற்கை அளித்துள்ள பெரிய பரிசாகும்.
Tags: