மகாமகத்துக்கு பிறகு ஆதி கும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் !

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 4 மகாமகங் களுக்குப் பிறகு, ஆதிகும் பேஸ்வரர் கோயிலில் நேற்று தேரோ ட்டம் நடை பெற்றது.
12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடை பெறும் மகாமகப் பெரு விழா ஆதிகும் பேஸ்வரர் கோயில் கொடி யேற்றத் துக்குப் பிறகுதான் தொடங்கப் படுகிறது. 

அந்த வகையில் மகாமகப் பெருவிழா வுக்கும், கும்பகோணம் நகரின் பெயருக்கும் காரணமா னதாக இந்த கோயில் போற்றப் படுகிறது.

மகாமகப் பெரு விழாவின் 8-ம் திருநாளான நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு விநாயகர் மற்றும் சுப்பிர மணியர் தேர்கள் வடம் பிடிக்கப் பட்டன. 

இதைத் தொடர்ந்து 8 மணி யளவில் கும்பேஸ் வரர் தேரும், அதைத் தொடர்ந்து மங்களாம் பிகை அம்பாள் தேரும் வடம் பிடிக்கப் பட்டன. 

இதற்கென வண்ணத் துணிகளைக் கொண்டு அனைத்துத் தேர்களும் சிறப்பாக அலங்க ரிக்கப் பட்டிருந்தன. அனைத்துத் தேர்களும் நிலையடி யிலிருந்து புறப்பட்டு, கோயில் வீதிகளை வலம் வந்து மீண்டும் நிலைய டியில் நிறுத்தப் பட்டன.
இந்த விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இரவு 7 மணிக்கு சண்டிகே ஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத் தையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந் தனர்.

பல்வேறு காரணங்களால்...

கடந்த 1968-ம் ஆண்டு நடைபெற்ற மகாமகப் பெருவிழா வின்போது ஆதிகும் பேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு ஆண்டு தோறும் மாசிமக த்தன்று தேரோ ட்டம் நடைபெற்று வருகிறது. 
1980, 1992 மற்றும் 2004 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற மகாமகப் பெரு விழாக்களி ன்போது பல்வேறு காரணங் களால் இந்த தேரோட் டம் நடைபெற வில்லை. 

48 ஆண்டுக ளுக்குப் பிறகு தற்போது நடை பெறும் மகாமகப் பெரு விழாவில் தான் தேரோட் டம் நடைபெற் றுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.
Tags:
Privacy and cookie settings