சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம் !

திருவாரூர் மாவட்டம் வலங்கை மானை அடுத்த பெருங்குடி நடுத் தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது36). மாற்றுத்தி றனாளி. நேற்று மாலை இவர் மேலஅமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார்.
அப்போது எதிரே சைக்கிளில் வந்த மேலஅமராவதி வடக்கு ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த விவசாயி பரமசிவம் (35) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இந்த விபத்தில் தினேஷ் குமார், பரமசிவம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அருகல் இருந்த வர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனும தித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings