விமானி இல்லாததால் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் !

டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் விமானி இல்லாததால் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இதனால் பயணிகள் அனைவரும் பெரும் அவதிக் குள்ளானார்கள்.
விமானி இல்லாததால் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் !
ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து புவனேஷ் வருக்கு செல்ல தயாராக இருந்தது. காலை 11 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் புறப்பட வில்லை. 

பயணிகள் விமானத்தில் சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் காத்து இருந்தனர். இந்த விமானத் தில் மனித உரிமை ஆணைய குழுவினர் உள்பட பயணிகள் அனை வரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். 

விமானத்தை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வில்லை என்று பயணிகளுக்கு எந்தவித விளக்கம் அளிக்காமல் காக்க வைத்துள்ளது. 
ஏர் இந்தியா நிறுவனம். விமா னத்தை இயக்க விமானி இல்லாததால் கால தாமதம் ஆகியது பின்பு தெரிய வந்தது. 

பயணிகள் எதிர்ப்பு தெரிவித் ததையடுத்து மற்றொரு விமானி வரவழைக் கப்பட்டு விமானம் புவனேஸ் வருக்கு கிளம்பிச் சென்றது.
Tags:
Privacy and cookie settings